பள்ளிவாசல்களின் பாதுகாப்பு, புனிதம் தொடர முயற்சிகள்

பள்ளிவாசல்களின் பாதுகாப்பு, புனிதம் தொடர முயற்சிகள்

2 mins read
6d65cd8f-564a-45a0-b9f0-037c809b5df8
சிங்கப்பூரில் உள்ள பள்ளிவாசல்கள் 2017 முதலே தங்கள் அவசரகால ஆயத்தநிலை ஆற்றலைப் பலப்படுத்தி வந்துள்ளதாக முயிஸ் அமைப்பு தெரிவித்து உள்ளது. ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கோப்புப்படம் -

சிங்­கப்­பூ­ரில் உள்ள பள்­ளி­வா­சல்கள் பாது­காப்­பு­டன் புனி­த­மிக்க இடங்­களாக தொடர்ந்து இருந்து வரும் என்று முஸ்­லிம் தலை­வர்­கள் மறு­உறுதி தெரி­வித்து இருக்­கி­றார்­கள் என்­றா­லும் தங்­க­ளு­டைய அவ­ச­ர­கால ஆயத்தநிலை ஆற்றலைப் பள்­ளி­வா­சல்­கள் தொடர்ந்து பலப்­படுத்தி வரும் என்று சிங்­கப்­பூர் இஸ்­லா­மிய சமய மன்­றம் (முயிஸ்) தெரி­வித்­துள்­ளது.

பள்­ளி­வா­சல் நிர்­வா­கச் சபை உறுப்­பி­னர்­க­ளின் நிகழ்ச்சி ஒன்­றில் உரை­யாற்­றிய முயிஸ் அமைப்­பின் தலைமை நிர்­வா­கி­யான ஈசா மசூது, இதர அமைப்­பு­க­ளு­டன் சேர்ந்து சமூ­கத்­துக்­குச் சேவை­யாற்­றும் முயற்­சி­களை தீவி­ரப்­ப­டுத்­தும்­படி பள்­ளி­வா­சல் தலை­வர்­களை வலி­யு­றுத்­தி­க் கேட்டுக்கொண்டார்.

நம்­ பள்­ளி­வா­சல்­கள் நம் பிள்ளை­க­ளுக்­கும் பெற்­றோ­ருக்­கும் குடும்­பத்­திற்­கும் நண்­பர்­களுக்கும் அக்­கம்­பக்­கத்­தி­ன­ருக்­கும் தொடர்ந்து பாது­காப்­பான, புனி­த­மான இட­மா­கத் திகழ்­வதை உறு­திப்­ப­டுத்­து­வ­தில் பள்­ளி­வா­சல் தலை­வர்­கள் உயிர்­நா­டி­யாக பணி­யாற்று­வதாக அவர் குறிப்­பிட்­டார்.

"வருங்­கா­லத்­தி­லும் நாம் தொடர்ந்து நமது அவ­ச­ர­கால ஆயத்­த­நிலை ஆற்­றலை மிக முக்­கி­ய­மா­கக் கருதி பலப்­ப­டுத்தி வரு­வோம்," என்றார் திரு ஈசா.

டன்­லப் ஸ்தி­ரீட்­டில் புதுப்­பிக்­கப்­பட்டு உள்ள அப்­துல் கஃபூர் பள்ளி­வா­ச­லில் அவர் உரை­யாற்­றி­னார்.

இங்­குள்ள பள்­ளி­வா­சல்­கள் தங்­க­ளு­டைய அவ­ச­ர­கால ஆயத்­த­நிலை ஆற்­றல்­களை 2017 முதலே பலப்­ப­டுத்தி வந்­தி­ருப்­ப­தாக முயிஸ் அமைப்பு தெரி­வித்­துள்­ளது.

பயிற்­சி­கள், அவ­ச­ர­கால பயிற்சி­கள் ஒரு­பு­றம் இருக்க, பள்­ளி­வாசல்­களில் பாது­காப்பு மிரட்­டல்­களைக் கண்­கா­ணிக்­கும் வகை­யில் தனிப்­பட்­ட­வர்­க­ளைத் திரட்­டும் ஒருங்­கிணைந்த முறை ஒன்­றும் நடப்­பில் இருந்து வரு­கிறது.

அனைத்­து­வகை பயங்­க­ர­வாதத்தை­யும் வன்­செ­யல்­க­ளை­யும் சமூ­கம் கண்­டிப்­ப­தாகவும் சமூ­கத்­தில் பிள­வு­களை ஏற்­ப­டுத்­து­வதை நோக்­க­மா­கக் கொண்ட அத்­த­கைய செயல்­க­ளுக்கு எந்த சம­யத்­தி­லும் இட­மில்லை என்றும் திரு ஈசா குறிப்­பிட்­டார்.

பல சமய சமூ­கங்­களுக்­கி­டையே அணுக்­க­மான பிணைப்பை அவர் மறு­உ­று­திப்­படுத்­தி­னார்.

சிங்­கப்­பூ­ரில் உள்ள இரண்டு பள்­ளி­வா­சல்­களில் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக தாக்­கு­தல்­களை நடத்த 16 வயது இளை­ஞர் ஒரு­வர் திட்­ட­மிட்டு இருந்­த­தாக தெரி­ய­வந்­ததை அடுத்து முயிஸ் தலைமை நிர்­வாகி­யின் இந்­தச் செய்தி இடம்­பெற்று இருக்­கிறது.

இந்­திய வம்­சா­வ­ளி­யைச் சேர்ந்த அந்த சிங்­கப்­பூர் இளை­ஞர், புரா­டெஸ்­டன்ட் கிறிஸ்­துவர்.

"அவர் கைது­ செய்­யப்­பட்ட தக­வல் வெளி­யான பிறகு நாங்­கள் எங்­கள் பள்­ளி­வா­சல்­க­ளுக்கு கிறிஸ்துவ தலை­வர்­களை அழைத்து தோழமை உணர்வை மறு­உ­று­திப்­படுத்­தி­னோம். வன்­செ­யல் மிரட்­டல்­கள் நம்மைப் பிரித்­து­வி­டாது என்­பதை அதன்­மூ­லம் வெளிப்­படுத்­தி­னோம்," என்று திரு ஈஷா குறிப்­பிட்­டார்.

"இத்­த­கைய திட்­ட­மி­டப்­பட்ட சதித்­திட்­டம் போல் நம்­ சமூ­கத்­திற்கு மிரட்­டல் விடுக்­கப்­படும் போது நாம் ஐக்­கி­யத்தை பலப்­படுத்தி ஒன்­றி­ணைய வேண்­டும்.

"வெறுப்­பு­ணர்வை உண்­டு­பண்­ணும் செய்திகள் நம்மை பிரித்­து­விட ஒரு­போ­தும் அனு­ம­தித்­து­வி­டக் கூடாது," என்று திரு ஈஷா வலி­யு­றுத்­திக் கூறி­னார்.

மூன்று பள்­ளி­வா­சல்­க­ளைச் சேர்ந்த 39 தொண்­டூ­ழி­யர்­கள் நேற்­றைய நிகழ்ச்­சி­யில் பள்­ளி­வா­சல் நிர்­வா­கச் சபை உறுப்­பி­னர்­க­ளாக நிய­மன கடி­தங்­க­ளைப் பெற்­ற­னர்.