ஜனவரியில் சாதனை அளவாக 2,570 சாலைக் குழிகள்; அவற்றில் 95% சீர்செய்யப்பட்டுவிட்டன: ஏமி கோர்

ஜனவரியில் சாதனை அளவாக 2,570 சாலைக் குழிகள்; அவற்றில் 95% சீர்செய்யப்பட்டுவிட்டன: ஏமி கோர்

2 mins read
e02edc3a-d1db-4386-8be6-ecc9e9d63dff
கடந்த மாதம் பெய்த கடும் மழை, தீவு எங்கும் உள்ள சாலை களில் பெரும் அளவில் குழிகளை ஏற்படுத்தின.படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சிங்­கப்­பூ­ரில் கடந்த மாதம் பெய்த தொடர் மழை­யால் தீவெங்­கும் உள்ள சாலை­களில் சாதனை அள­வில் 2,570 குழி­கள் தோன்­றின.

இது பொது­வாக ஈர­மான பரு­வ­நி­லை­யின்­போது பெய்­யும் மழை­யால் தோன்­றும் சாலைக் குழி­களை­விட இரண்டு மடங்கு அதி­கம் என்­றும் கடந்த மாதம் வழக்­கத்­துக்கு மாறாக தொடர் கனமழை பெய்­தது என்­றும் நீடித்த நிலைத்­தன்மை, சுற்­றுப்­பற மூத்த துணை அமைச்­சர் ஏமி கோர் நேற்று நாடா­ளு­மன்­றத்­தில் தெரி­வித்­தார்.

பீஷான்-தோ பாயோ குழுத் தொகுதி உறுப்­பி­னர் சக்­தி­யாண்டி சுப்­பாட்­டும் ராடின் மாஸ் தனித் தொகுதி உறுப்­பி­னர் மெல்­வின் யோங்கும் கேட்ட கேள்­வி­க­ளுக்­குப் பதி­ல­ளித்த அவர், நேற்று முன்­தினம் வரை சாலைக் குழி­களில் 95%க்கு மேற்­பட்­டவை சரி­செய்­யப்­பட்டுவிட்­டன என்று தெரிவித்தார்.

சாலை­களில் ஆபத்­தான விளைவு­களை ஏற்­ப­டுத்­தக்­கூடியவை என்று அடை­யா­ளம் காணப்­பட்­ட­ குழிகளுக்கு முன்­னு­ரிமை அளித்த நிலப் போக்­கு­வரத்து ஆணை­யம் அவற்­றை முதலில் சீர்செய்­தன என்­றும் எஞ்­சிய சாலைக் குழி­க­ளைச் சரி­செய்யும் பணி­கள் தொடர்ந்து நடை­பெற்­றுக்­கொண்­டி­ருக்­கின்­றன என்றும் அமைச்­சர் விவ­ரித்­தார்.

"பொது­வாக, சாலைக் குழி­களை 24 மணி நேரத்­துக்­குள் ஆணை­யம் சரி­செய்­து­வி­டும். ஆனால், ஜன­வரி மாதத்­தில் அவற்­றை சரி­செய்ய ஆணை­யம் தனது ஆள்­பலத்தை மும்­ம­டங்கு அதி­க­ரித்­தது.

"சாலைக் குழி­களை மூடி­ய­வுடன் அவை காய்­வ­தற்கு சில மணி நேரம் ஆகும். ஆனால் தொடர் கன­மழை அதற்கு பெரும் இடைஞ்­சலாக இருந்­தது," என்­றும் டாக்­டர் கோர் கூறி­னார்.

சாலை­களில் அதி­கம் காணப்­படும் குழி­க­ளால் வாக­ன­மோட்­டி­களும் மோட்­டார்­சைக்­கி­ளோட்­டி களும் கவலை கொண்­ட­னர்.

தொடர் கன­ம­ழை­யால், சாலை விரி­சல்­களில் நீர் ஊடு­ருவும். அதன் மீது வாக­னங்­கள் தொடர்ந்து செல்­வ­தால், விரி­சல்­க­ளுக்­குள் தேங்­கி­யுள்ள நீர் மேலும் ஆழ­மாகச் சென்று விரி­சல்­க­ளைக் கடு­மை­யாக்கி, குழி­களை உண்டாக்கும்.

"தீவெங்­கும் உள்ள 9,000 கிலோ மீட்­டர் தடச் சாலை­களில் கோளாறு­கள் உள்­ளனவா என்­பதை நிலப் போக்­கு­வ­ரத்து ஆணை­யம் வழக்­க­மாக மேற்­கொண்டு வரு­கிறது.

"விரை­வுச்சாலை­களை வாரத்­துக்கு ஒரு முறை­யும், பிர­தான சாலை­களை இரு வாரங்­க­ளுக்கு ஒரு முறை­யும், மற்ற சாலை­களை எட்டு வாரங்­க­ளுக்கு ஒரு முறை­யும் அது சோதிக்­கிறது," என்று அமைச்­சர் சொன்­னார்.

மண் சரிவு பற்றி பேசிய டாக்­டர் கோர், "பொதுச் சாலை­க­ளுக்கு அரு­கில் உள்ள சுமார் 200 சரிவு நிலங்­கள் மூன்று மாதங்­க­ளுக்கு ஒரு முறை சோதிக்­கப்­ப­டு­கின்­றன. கடும் மழை­யின் கார­ண­மாக அதிக சரி­வுள்ள நிலங்­க­ளில் மண் சரிவு ஏற்­படும் அபா­யம் அதி­கம் இருப்­பதால் அது வாரத்­துக்கு ஒரு முறை சோதிக்­கப்­படும்.

"சாலைக் குழி­கள், மண் சரிவு என்று எது­வாக இருந்­தா­லும் அவற்றை உட­ன­டி­யா­கச் சரிசெய்து அவற்­றின் மூலம் பாது­காப்­புக்கு பங்­கம் ஏற்­ப­டா­மல் உறுதி செய்­வதே எங்­கள் முன்­னு­ரிமை," என்றும் அமைச்­சர் விளக்­கி­னார்.