புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஒன்பது நியமன நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேற்று நாடாளுமன்ற நாயகர் முன்னிலையில் பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்டனர்.
எஸ்பி குழுமத்தின் தலைமைத் தொழில்நுட்ப அதிகாரி திரு அப்துல் சமாத் அப்துல் வஹாம், சிஸ்டிக் நிறுவனத்தின் தலைவர் திருவாட்டி ஜெனட் ஆங், குளோபல் எக்ஸ்போர்ட்ஸ் சம்மேளனத்தின் செயலக இயக்குநர் திரு மார்க் சே, குவோகோலாண்ட் குழுமத்தின் நிர்வாக இயக்குநர் திரு செங் சிங் யாவ், சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக்கழகப் பொருளியல் பள்ளியின் துறைத் தலைவர் பேராசிரியர் ஹூன் ஹியான் டெக், சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் பழமைப் பாதுகாப்பு அறிவியல் நிபுணர் பேராசிரியர் கோ லியான் பின், வழக்கறிஞர் திரு ராஜ் ஜோஷுவா தாமஸ், கூ டெக் புவாட் மருத்துவமனையின் பல்சீரமைப்புத் துறைப் பதிவாளர் டாக்டர் ஷஹிரா அப்துல்லா, தாம்சன் மார்பகச் சிகிச்சை நிலையத்தின் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் டான் இயா சுவாம் ஆகியோரே அந்தப் புதிய நியமன நாடாளுமன்ற உறுப்பினர்கள்.

