'தடுப்பூசி பற்றிய தவறான தகவலுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும்'

'தடுப்பூசி பற்றிய தவறான தகவலுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும்'

2 mins read
f03b76b5-d9f1-4c3d-9ca8-d40bbb7fba13
படம்: ராய்ட்டர்ஸ் -

கொவிட்-19 தடுப்­பூ­சி­க­ளைப் பற்­றிய தவ­றான தக­வல் பர­வு­வதை அர­சாங்­கம் தீவி­ர­மா­கக் கண்­காணித்து வரு­கிறது என்­றும் தேவைப்­ப­டும்­போது அத்­த­வ­றான தக­வ­லுக்கு எதி­ரா­கச் சட்­டத்­தின் முழு சக்­தி­யை­யும் பயன்­ப­டுத்த அர­சாங்­கம் தயங்­காது என்­றும் தொடர்பு, தக­வல் அமைச்­சர் எஸ். ஈஸ்­வ­ரன் நேற்று நாடா­ளு­மன்­றத்­தில் கூறி­னார்.

கடந்த ஓர் ஆண்­டில் கொரோனா கிருமி பற்­றிய 60க்கும் மேற்­பட்ட ஊகங்­கள், வதந்­தி­கள், மோச­டி­கள், பொய்ச்­செய்­தி­க­ளுக்கு எதி­ராக அர­சாங்­கம் பல­வி­த­மான நட­வ­டிக்­கை­க­ளைக் கையாண்­டுள்­ளது.

இதில் இணை­ய­வழி பொய்ச் செய்­திக்­கும் சூழ்ச்­சித் திறத்­திற்­கும் எதி­ரான பாது­காப்­புச் சட்­டம் (பொஃப்மா) உள்­ளிட்ட சட்­டங்­கள் பற்றி பொது­மக்­க­ளுக்கு எடுத்­துக்­கூ­று­வ­தும் அடங்­கும்.

பொஃப்மா அலு­வ­ல­கம் அத்­தகைய தக­வல்­க­ளைக் கையாள நட­வ­டிக்­கை­கள் ஏதே­னும் எடுக்­கிறதா என்ற பாட்­டா­ளிக் கட்சி நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் ஹி டிங் ரூவின் (செங்­காங் குழுத்­தொ­குதி) கேள்­விக்­குப் பதி­ல­ளித்த அமைச்­சர் ஈஸ்­வ­ரன், கொவிட்-19 கிரு­மிப்­ப­ர­வலை எதிர்த்­துப் போரா­டு­வ­தில் தவ­றான தக­வல்­கள் கடும் சவா­லாக உள்­ளன என்­றார்.

நம்­ப­க­மான வளங்­க­ளி­லி­ருந்து துல்­லி­ய­மான தக­வல்­க­ளைச் சரி­யான நேரத்­தில், வெளிப்­ப­டை­யான முறை­யில் சிங்­கப்­பூ­ரர்­க­ளுக்கு வழங்­கு­வதை அர­சாங்­கம் முக்­கிய நோக்­க­மா­கக் கொண்­டி­ருக்­கிறது என்­றார் அமைச்­சர் ஈஸ்­வ­ரன்.

எடுத்­துக்­காட்­டாக, தக­வல்­களும் தெளி­வு­ப­டுத்­தல்­களும் தொடர்ந்து ஊட­கங்­கள், அர­சாங்க இணை­யத்­த­ளங்­கள், சமூக ஊட­கங்­கள், வாட்ஸ்­அப், டெலி­கி­ராம் சேனல்­களில் உள்ள அரசு ஊட­கங்­கள் வழி தெரி­விக்­கப்­ப­டு­கின்­றன.

தடுப்­பூ­சித் திட்­டத்­தைப் பொறுத்­த­வ­ரை­யில், பொது­மக்­களுக்கு விழிப்­பு­ணர்வை ஏற்­ப­டுத்­து­வதே முக்­கி­யம் என்று அவர் வலி­யு­றுத்­தி­னார்.

சமூ­கத்­தின் அனைத்து பிரிவு­களை­யும் அடைய வேண்­டும் என்­ப­தற்­காக கொவிட்-19 தடுப்­பூ­சி­களைப் பற்­றிய அத்­தி­யா­வ­சிய தக­வல்­கள் ஏற்­கெ­னவே பல தளங்­களில், பல மொழி­களில் வழங்­கப்­பட்டு வரு­கின்­றன.

சுகா­தார அமைச்­சின் இணைத்­த­ளம் உள்­ளிட்ட அதி­கா­ர­பூர்­வத் இணையத்தளங்­க­ளைத் தங்­க­ளின் தளங்­களில் சேர்த்­துக்­கொள்ள அர­சாங்­கம் பிர­தான தொழில்­நுட்ப நிறு­வ­னங்­க­ளு­டன் இணைந்து பணி­யாற்­றி­யுள்­ளது என்­றார் அவர்.

முதி­யோ­ருக்­கான தடுப்­பூ­சித் திட்­டம் தற்­போது நடை­மு­றைப்­படுத்­தப்­பட்டு வரு­கிறது.

அது குறித்து முதி­யோ­ருக்கு இருக்­கக்­கூ­டிய சந்­தே­கங்­க­ளைத் தெளி­வு­ப­டுத்த, மக்­கள் கழ­க­மும் மூத்த தலை­மு­றைத் தூதர்­களும் வீடு வீடா­கச் செல்­ல­வி­ருக்­கின்­றனர்.

பொய்ச்­செய்­தி­கள் பர­வா­மல் தடுக்­கும் பொறுப்பு பொது­மக்­களுக்கு உள்­ளது என்று அமைச்­சர் ஈஸ்­வ­ரன் குறிப்­பிட்­டார். உறு­திப்­ப­டுத்­தப்­ப­டாத தக­வல்­க­ளைப் பகிர்ந்­து­கொள்­ள­வேண்­டாம் என்று அவர் கேட்­டுக்­கொண்­டார்.