பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ள தீர்மானம் நிறைவேற்றப்பட்டது

பரு­வ­நிலை சவால்­களை எதிர்­கொள்ள, கரிம வரியை அதி­க­ரிப்­பது, பொதுத் துறை­யின் நீடித்த நிலைத்­தன்மை தர­நி­லையை உயர்த்து­வது, பரு­வ­நிலை குறித்த கல்­வியை மேம்­ப­டுத்­து­வது உள்­ளிட்ட பல பரிந்­து­ரை­களை நாடாளு­மன்ற உறுப்­பி­னர்­கள் மன்­றத்­தில் நேற்­று­முன்­தி­னம் வைத்­த­னர்.

பரு­வ­நிலை மாற்­றத்­திற்கு எதி­ரான முயற்­சி­களை தீவி­ரப்­ப­டுத்­த­வும் விரை­வு­ப­டுத்­த­வும் மன்­றத்­தில் தீர்­மா­னம் நிறை­வேற்­றப்­பட்­டது.

‘பரு­வ­நிலை மாற்­றத்தை உலக அள­வி­லான பிரச்­சி­னை­யா­க­வும் மனி­த­கு­லத்­துக்கு அச்­சு­றுத்­த­லா­க­வும்’ அத்­தீர்­மா­னம் குறிப்­பி­டு­கிறது. இதில் தனி­யார் துறை, சிங்­கப்­பூர் மக்­கள், பொது சமூ­கம் ஆகி­ய­வற்­று­டன் இணைந்து அர­சாங்­கம் பணி­யாற்ற வேண்­டும் என்று மன்­றம் கேட்­டுக்­கொண்­டது. முன்­ன­தாக, மக்­கள் செயல் கட்சி­யின் ஆறு உறுப்­பி­னர்­கள் முன்­வைத்த தனிப்­பட்ட உறுப்­பி­னர் தீர்­மா­னம் குறித்து கிட்­டத்­தட்ட ஆறு மணி நேரம் உறுப்­பி­னர்­கள் விவா­தித்­த­னர்.

பருவநிலை மாற்றத்திலிருந்து நாம் தப்ப முடியாது

“உயர்ந்த பொறி­யி­யல், உயர்­தர வடி­வ­மைப்பு மூலம் பரு­வ­நிலை மாற்­றத்­தி­லி­ருந்து தப்­பிக்­க­லாம் என எதிர்­பார்க்க முடி­யாது. உல­க­ம­ய­மாவதில் பரு­வ­நிலை மாற்­றம் நமது வாழ்­வா­தா­ரங்­க­ளை­யும் அமை­தி­யை­யும் பாதிக்­கும் வழி­க­ளை­க் கண்­ட­றி­யும்,” என்று நீடித்த நிலைத்­தன்மை, சுற்­றுப்­பு­றத்­திற்­கான நாடாளு­மன்­றக் குழு­வின் தலை­வரும் நீ சூன் குழுத்­தொ­குதி உறுப்­பி­ன­ரு­மான லூயிஸ் இங் கூறி­னார்.

மேலும், இத்­தீர்­மா­னம் அனைத்­து­ல­கக் கட­மை­களை நிறை­வேற்­று­வ­தில் சிங்­கப்­பூ­ரின் நற்­பெ­யரை நிலை­நி­றுத்­து­கிறது என்­றும் அவர் கூறி­னார். பொதுச் சேவை­யில் நீடித்த நிலைத்­தன்மை தரத்தை உயர்த்­து­வது அவர் முன்­மொ­ழிந்த பரிந்­துரை­களில் ஒன்று.

பாடத்திட்டத்தில் கூடுதல் பருவநிலை மாற்ற விழிப்புணர்வு

“கல்வி விளை­வு­க­ளின் முக்­கி­ய­மான ஒன்­றாக நிலைத்­தன்மை விளங்­கும் வகை­யில் தற்­போ­தைய பாடத்­திட்­டத்தை மறு­ஆய்வு செய்­வதை­யும் ‘முழு­மை­யான அணு­கு­முறை’ மூலம் பொறுப்­பான பழக்­கங்­களை வளர்ப்­ப­தை­யும் அர­சாங்­கம் பரி­சீ­லிக்­குமா என்று எம்பி நடியா சாம்­டின் (அங் மோ கியோ குழுத்­தொ­குதி) கேட்­டார்.

புவி­யி­யல், அறி­வி­யல் பாடங்­களில் மட்­டுமே பரு­வ­நிலை மாற்­றத்­தி­னால் ஏற்­படும் பொரு­ளி­யல் பாதிப்பு, சமூக நீதி போன்­றவை பற்­றிப் பேசப்­ப­டு­வ­தா­க­வும் எல்லா மாண­வர்­க­ளுக்­கும் இது குறித்­துப் பேச வாய்ப்­புக் கிடைப்­ப­தில்லை என்­றும் அவர் சொன்­னார். மாண­வர்­கள், பாடப் புத்­த­கங்­களில் படித்­தா­லும் தம்­மைச் சுற்றி உள்­ள­வர்­களும் அதி­க­ளவு நிலைத்­தன்­மை­யற்ற வாழ்க்­கை­மு­றை­யையே பின்­பற்­று­வதை அவர்­கள் காண்­கி­றார்­கள் என்­றார் அவர்.

வசதி குறைந்தோரும் பருவநிலை மாற்றமும்

வசதி குறைந்­த­வர்­கள் பரு­வ­நிலை மாற்­றத்­தின் விளை­வு­களை சம­மற்ற வகை­யில் எதிர்­கொள்­வர் என்று பாட்­டா­ளிக் கட்சி உறுப்­பினர் லியோன் பெரேரா (அல்­ஜு­னிட் குழுத்­தொ­குதி) கூறி­னார்.

எடுத்­துக்­காட்­டாக, புதிய வீட்­டிற்கு மாறு­வது, வீட்­டில் குளிர்­சாதன வச­தியை அல்­லது காற்றை வடி­கட்­டும் வச­தி­யைப் பொருத்­து­வது, மருத்­துவ சிகிச்­சை­கள் போன்­ற­வற்­றுக்கு குறைந்த வளங்­களையே அவர்­கள் பெற்­றி­ருப்­பர் என அவர் விளக்­கி­னார்.

அத்­து­டன், சில புவி­யி­யல் பகுதி­கள் அதிக பாதிப்­புக்­குள்­ளா­கும் என்­ப­தை­யும் அவர் குறிப்­பிட்­டார்.

பரு­வ­நிலை மாற்­றத்­துக்கு எதி­ரான முயற்­சி­களில் இவை கருத்­தில் கொள்­ளப்­பட வேண்­டும் என்ற அவர், வீவக அடுக்­கு­மா­டி­க­ளுக்கு, குறிப்­பாக வாடகை வீடு­கள், வசதி குறைந்­தோர் அதி­கம் வாழும் தொகு­தி­க­ளி­லுள்ள வீடு­க­ளுக்கு வெப்­பத்தை உள்­ளி­ழுக்­காத சாயம் பூசு­வது போன்ற கொள்­கை­க­ளைப் பரிந்­து­ரைத்­தார். கோல்ஃப் திடல்­க­ளுக்கு ஒதுக்­கப்­படும் நில அள­வை­யும் அர­சாங்­கம் கவ­னத்­தில் கொள்­ள­வேண்­டும் என்­றார் அவர். தற்­போது சிங்­கப்­பூ­ரின் நிலப்­ப­ரப்­பில் 1,500 ஹெக்­டர், அதா­வது கிட்­டத்­தட்ட 2% கோல்ஃப் திட­லாக உள்­ளதை அவர் குறிப்­பிட்­டார்.

காடுகளின் முக்கியத்துவம்

சிங்­கப்­பூ­ரில் காடு­க­ளைப் பாது­காக்க வேண்­டிய அவ­சி­யம் குறித்து பல நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் பேசி­னர். திரு கிறிஸ்­டோ­பர் டி சூசா (ஹாலந்து - புக்­கிட் தீமா), சிங்­கப்­பூர் காடு­களை ‘சொத்­துக்­கள்’ என்று கரு­தும் நாடாக வேண்­டும், காடு­க­ளைப் பாது­காப்­ப­து­டன் அதன் பல்­லு­யிர் மதிப்­பிற்­காக அதில் முத­லீடு செய்­ய­வும் வேண்­டும் என்­றார். தமது தொகு­திக்கு உட்­பட்ட டோவர், கிளெ­மென்டி காடு­கள், ரயில் பசு­மைப் பாதை அனைத்­தும் குடி­யி­ருப்­பா­ளர்­க­ளுக்கு ‘சிறந்த பல்­லு­யிர் மதிப்பை’ உரு­வாக்­கி­யுள்­ள­தாக, குறிப்­பாக கொவிட்-19 கொள்ளைநோய் காலத்­தில் என்று அவர் குறிப்­பிட்­டார்.

கார்பன் வரி

சிங்­கப்­பூ­ரின் கார்­பன் வரியை படிப்­ப­டி­யாக உயர்த்த பரிந்­து­ரைத்­தார் எம்பி டான் வீ (சுவா சூ காங் குழுத்­தொ­குதி). 2030ஆம் ஆண்டு வாக்­கில் $30க்கும் $35க்கும் இடை­யி­லும் 2035ஆம் ஆண்டு வாக்­கில் $50க்கும் $90க்கும் இடை­யி­லும் 2040ம் ஆம் ஆண்டு $75க்கும் 120க்கும் இடை­யி­லும் வரியை உயர்த்­துவது அவ­ரது பரிந்­துரை.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!