வட்ட ரயில் பாதை நிலையங்களின் துப்புரவுப் பணிகளில் இயந்திரன் படை

வட்ட ரயில் பாதை நிலையங்களின் துப்புரவுப் பணிகளில் இயந்திரன் படை

1 mins read
89410290-e4cf-42a6-bb04-0b3314e76501
படம்: எஸ்எம்ஆர்டி -

கொவிட்-19 தொற்றுநோய் பரவலுக்கு மத்தியில் வட்ட ரயில் பாதை நிலையங்களை சுத்தமாகவும் தூய்மையாகவும் வைத்திருக்க இயந்திரன் படை ஒன்று களமிறங்கியிருக்கிறது.

திரு வி. கணேசன் வேலுவுக்கு 46, முதல் முறையாக இயந்திர மனிதனுடன் இணைந்து பணியாற்றுவது இனிமையான அனுபவம்.

"பயிற்சி பெற்ற பிறகு, ரோபோக்களை என்னால் எளிதாக இயக்க முடியும். இந்தப் புதிய திறன் என் எதிர்கால முன்னேற்றத்திற்கு பயனுள்ளதாக இருக்கும் என்று எஸ்எம்ஆர்டியின் துப்புரவு குத்தகை நிறுவனங்களில் ஒன்றான 'ஏ-ஃபோர்ஸ் மெயின்டனசின்' மூத்த மேற்பார்வையாளரான திரு கணேசன் கூறினார்.

"முன்னர் நான் செய்த பணியுடன் ஒப்பிட, துப்புரவு ரோபோக்கள் நிலையங்களை சுத்தம் செய்வதை வேகமாகவும் எளிதாகவும் ஆக்கியுள்ளன," என்றார் அவர்.