ஐந்து மில்லியன் வெள்ளிக்கான டோடோ ரீயூனியன் குலுக்குச் சீட்டை வாங்க நேற்று சிங்கப்பூர் முழுவதும் ‘சிங்கப்பூர் பூல்ஸ்’ கடைகளில் நீண்ட வரிசை காணப்பட்டது.
இந்தக் குலுக்குக்கான சீட்டு விற்பனை கடந்த திங்கட்கிழமை தொடங்கியது.
நாளை வெள்ளிக்கிழமை இரவு 9.30 மணிக்கு அதிர்ஷ்டசாலிகள் யார் என்று தெரிந்துவிடும்.
இந்த சிறப்புக் குலுக்குச் சீட்டையொட்டி எல்லாக் கடைகளிலும் சீட்டு விற்பனை நேரம் இரவு 9 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.