42 மில்லியனுக்கு அதிகமானோர் சோதனைச் சாவடிகளைக் கடந்தனர்

சிங்­கப்­பூ­ரின் சோத­னைச் சாவ­டி­களைக் கடந்த ஆண்டு 42 மில்­லி­ய­னுக்கு மேற்­பட்ட பய­ணி­கள் கடந்து சென்­ற­னர். இது 2019ம் ஆண்டு விகி­தத்­தைக் காட்­டி­லும் 80% சரிவு.

மேலும் மதிப்பு குறைந்த பொருட் களின் எண்­ணிக்கை இரட்­டிப்­பாகி, 21 மில்­லி­ய­னைத் தொட்­டது என்­றும் குடி­நு­ழை­வுச் சோத­னைச் சாவ­டி­கள் ஆணை­யம் தெரி­வித்­துள்­ளது.

2020ல் சிங்­கப்­பூ­ருக்கு வந்த மற்­றும் சிங்­கப்­பூ­ரி­லி­ருந்து புறப்­பட்ட பய­ணி­க­ளின் எண்­ணிக்கை 80.6% சரிவு கண்­டது. ஒப்­பு­நோக்க, 2019ல் அந்த எண்­ணிக்கை 217 மில்­லி­யன். இது கடந்த ஐந்து ஆண்­டு­களில் ஆகக் குறைந்த எண்­ணிக்கை என்­றும் ஆணை­யம் நேற்று வெளி­யிட்ட தனது வரு­டாந்­திர புள்­ளி­வி­வர அறிக்­கை­யில் குறிப்­பிட்­டது.

ஆகா­யப் போக்­கு­வ­ரத்­துக்­கான தேவை நிலைகுத்­தி­ய­தால், பயணி களின் வருகை சரிந்­தது. கொவிட்-19 கொள்­ளை­நோய் கார ணமாக பல நாடு­கள் தங்­கள் எல்­லை­களில் கடு­மை­யான கட்­டுப்­பாடு­களை விதித்­தன.

பலர் வீட்­டி­லி­ருந்­த­வாறு, இணை­யம் வழி பொருட்­களை வாங்­கி­ய­தால், $400க்கும் குறைந்த மதிப்­பி­லான பொருட்­களின் எண்ணிக்கை பெரு­ம­ள­வில் அதி­க­ரித்­தது. 2019ல் இந்த வகை பொருட்­க­ளின் இறக்கு­­மதி $10.5 மில்­லி­ய­னாக இருந்­தது. ஆனால் இது கடந்த ஆண்டு இரட்­டிப்­பாகி $21 மில்­லி­யன் ஆனது.

இதற்­கி­டையே, சரக்­கு­கள், கொள்­க­லன்­கள், பொட்­ட­லங்­கள் என சிங்­கப்­பூ­ருக்­குள் வரும் பொருட்­கள் 400,000ஐத் தொட்­டது. 2019ஆம் ஆண்­டைக் காட்­டி­லும் இது 3.6% அதி­கம்.

சிங்­கப்­பூ­ருக்­குள் நுழை­யும் பய­ணி­கள் மற்­றும் வாக­னங்­க­ளின் விகி­தம் 55.4% சரிந்­த­தால், கள்ள சிக­ரெட்­டு­க­ளின் எண்­ணிக்­கை­யும் குறைந்­தது. 2020ல் மொத்­தம் 41,000 கள்ள சிக­ரெட்­டு­கள் கைப்­பற்­றப்­பட்­டன. 2019ல் அந்த எண்­ணிக்கை 92,000.

இந்த எண்­ணிக்கை குறைந்­தி­ருந்­தா­லும், குறைந்த மதிப்­புள்ள பொருட்­க­ளுக்­குள் மறைத்து சிங்­கப்­பூ­ருக்­குள் கள்­ளத்­த­ன­மா­கக் கொண்டு வரப்­படும் சிக­ரெட்­டு­க­ளின் எண்­ணிக்கை உயர்ந்து கொண்­டு­தான் இருக்­கிறது என்று ஆணை­யம் கூறி­யது. இதன் தொடர்­பான சம்­ப­வங்­கள் ஐந்து மடங்கு அதி­க­ரித்­தது. 2019ல் 610 ஆக இருந்த இந்த எண்­ணிக்கை கடந்த ஆண்­டில் 4,000க்கு உயர்ந்­தது.

உத்­த­ரவை மீறிய 22 பேர் மீது குற்­றச்­சாட்டு

வீட்­டில் தங்­கி­யி­ருக்­கும் உத்­த­ரவு மற்­றும் தனி­மைப்­ப­டுத்­தும் ஆணை ஆகி­ய­வற்றை மீறி­ய­தற்­காக 22 பேர் மீது கடந்த ஆண்டு குற்­றம் சாட்­டப்­பட்­டது என்று கூறிய ஆணை­யம் 2020ல் 280,000 உத்­த­ர­வு­கள் பிறப்­பிக்­கப்­பட்­டன. கிரு­மித்­தொற்று கடந்த ஆண்டு ஏப்­ர­லில் உச்­சத்­தைத் தொட்­ட­போது, 40,000 உத்­த­ர­வு­கள் பிறப்­பிக்­கப்­பட்­டன என்றும் ஆணையம் தனது அறிக்கையில் விவரித்தது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!