இனங்களுக்கிடையே வெறுப்பை ஏற்படுத்தும் வகையில் கடந்த ஆண்டு பொதுத் தேர்தலின்போது கருத்துகளை வெளியிட்ட ஆடவர் ஒருவருக்கு இரண்டு வாரச் சிறையும் $7,000 அபராதமும் தண்டனையாக விதிக்கப்பட்டது.
சிராஜுதீன் அப்துல் மஜீத் (படம்) எனும் அந்த 52 வயது ஆடவர், வேண்டுமென்றே இன உணர்வுகளைக் காயப்படுத்த நினைத்தது, இனக் குழுக்களுக்கிடையே வன்மத்தைத் தூண்டிவிட்டது என்று தம் மீது சுமத்தப்பட்ட குற்றத்தை நேற்று ஒப்புக்கொண்டார்.
கடந்த ஆண்டு ஜூன் 12, 13ஆம் தேதிகளில் தமது மூன்று நண்பர்களுக்கு, “மக்கள் செயல் கட்சி மலாய் சமூகத்தை துணை சிறுபான்மைக் குழுவாக உருவாக்க நினைக்கிறது. மலாய் சமூகத்தைக் கலைக்கும் நோக்கத்தில்தான் மற்ற இனங்கள் இந்நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன,” என்ற செய்திகளை அனுப்பி, அதை மற்றவர்களுடன் பகிரும்படி கேட்டுக் கொண்டார்.
மக்கள் செயல் கட்சி நாட்டுக்குள் அதிகமான வெளிநாட்ட வர்களை அனுமதிப் பதன் மூலம் இங்குள்ள மலாய் சமூகத்தை ஓரங்கட்ட நினைக்கிறது என்ற கருத்தின் மூலம் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்த சிராஜுதீன் முயன்றார் என்று அரசுத் தரப்பு வழக்கறிஞர் இங் யிவென் தெரிவித்தார்.
“இப்படிப்பட்ட செய்திகளை அனுப்பினால் இனங்களுக்கிடையே வெறுப்புணர்சி ஏற்படும் என்று நன்கு தெரிந்துதான் சிராஜுதீன் அச்செய்திகளை அனுப்பியுள்ளார் என்றும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
அவர் நண்பர்களில் ஒருவர் இது குறித்து போலிசில் புகார் கொடுத்தார்.
$5,000 பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள சிராஜுதீன் இம்மாதம் 22ஆம் தேதி தமது சிறைத் தண்டனையைத் தொடங்க சரண டைவார் என்று எதிர்பார்க்கப்படு கிறது.