தெமாசெக் ஹோல்டிங்சின் பெயரைப் பயன்படுத்தி அதில் முதலீடு செய்தால் பெரும் பணம் ஈட்டலாம் என்று கூறி பலரை 200,000 வெள்ளிக்கு மேல் ஏமாற்றிய பலே ஆசாமிக்கு நேற்று ஆறு ஆண்டுகள், பத்து மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
சத்தீஷ் நாயர் தனபாலனுக்கு தற்போது 36 வயதாகிறது.
அண்டை வீட்டுக்காரரான இளங்கோவன் பிள்ளை முனுசாமியை, 56, ஒவ்வொரு முறையும் நல்ல லாபம் கிடைக்கும் என்று கூறி அவர் ஏமாற்றி வந்தார்.
2014 முதல் 2016 வரையில் நடைெபற்ற மோசடியில் இளங்கோவனுக்கு ‘ஹோ சிங்’ என்ற பெயரிலும் குறுந்தகவல்கள் வந்தன.
சத்தீஷ் பல்வேறு முதலீட்டு திட்டங்களை வகுத்து ஒன்பது பேரிடம் ஏறக்குறைய ஒரு மில்லியன் வெள்ளி ஏமாற்றியுள்ளார்.
2017ல் இதே போன்ற முதலீட்டு உத்தியைப் பயன்படுத்தி ஃபதில்லா இப்ராஹிம், அவரது கணவர் அனிஸ் சிராஜுடின் ஷேக் அப்துல்லா அவரது தாயார் திருமதி பரகத்துனிசா இ.ஏ.ஹலியுல் ரஹிமான் ஆகியோரை 400,000 வெள்ளிக்கு மேல் அவர் மோசடி செய்துள்ளார். பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏன் பணம் கிடைக்கவில்லை என்பதை காட்டுவதற்காக அரசாங்க அமைப்புகளின் பொய்யான ஆவணங்களையும் அவர் தயாரித்து வழங்கினார்.
2017ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் தந்தையின் நான்கு காசோலைகளை திருடி அதில் தந்தையைப் போல கையெழுத்திட்டு அவர் மோசடி செய்துள்ளார்.
இரண்டு காசோலைகளை அனிசுக்கும் ஃபதில்லா, திருமதி பரகத்துனிசா ஆகிய இருவருக்கு தலா ஒரு காசோலைகளை அவர் கொடுத்துள்ளார். ஒவ்வொரு காேசாலையும் 150,000 வெள்ளிக்கு வழங்கப்பட்டிருந்தன.
ஆனால் வங்கியில் போதுமான பணமில்லாததால் காசோலைகள் திரும்பி வந்தன. இதே போன்று இன்னும் சிலரையும் சத்தீஷ் ஏமாற்றியிருப்பதாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள ஆவணங்கள் தெரிவிக்கின்றன.
சத்தீஷ் மீது மொத்தம் 20 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. $700,000க்கு மேல் ஏமாற்றிய குற்றச்சாட்டுகளும் அவற்றில் அடங்கும். எஞ்சிய தொகைக்கான இதர குற்றச்சாட்டுகளும் அவருக்கு தண்டனை விதிக்கப் படும்போது கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டன. சத்தீஷ் தம் மீது சுமத்தப்பட்ட 20 குற்றச்சாட்டு களையும் ஒப்புக் கொண்டார்.