வெளிநாட்டினரை திருமணம் புரிந்த சிங்கப்பூர் பெண்களின் எண்ணிக்கை கடந்த பத்து ஆண்டுகளில் அதிகரித்து உள்ளது. அதேவேளையில், வெளிநாட்டு பெண்களை மணந்த சிங்கப்பூர் ஆடவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.
சென்ற 2019ல் 4,426 ஆண்கள் வெளிநாட்டுப் பெண்களைத் திருமணம் செய்துகொண்டனர். இந்த எண்ணிக்கை 2009ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 18 விழுக்காடு குறைவு.
2019ல் குறைந்தபட்சம் குறைந்தபட்சம் ஒரு சிங்கப்பூரர் சம்பந்தப்பட்ட மொத்த திருமணங்களில் வெளிநாட்டினரை மணந்து கொண்ட திருமணங்கள் அளவு 20 விழுக்காடாக இருந்தது. சிங்கப்பூரர்களை 2019ல் மணந்துகொண்ட வெளிநாட்டுப் பெண்களில் சுமார் 97 விழுக்காட்டினர் ஆசிய நாடுகளைச் சேர்ந்தவர்கள்.
இந்நிலையில், 2019ஆம் ஆண்டில் வெளிநாட்டு ஆண்களைக் கரம் பிடித்த சிங்கப்பூர் பெண்கள் 1,727 பேர். அந்த எண்ணிக்கை 2009ல் 1,134 ஆக இருந்தது. குறைந்தபட்சம் ஒரு சிங்கப்பூரர் சம்பந்தப்பட்ட மொத்த திருமணங்களில் இத்தகைய திருமணங்கள் சுமார் எட்டு விழுக்காடாக இருந்தன.
கடந்த 1999ல் வெளிநாட்டு ஆண்களை மணந்த சிங்கப்பூர் பெண்கள் 1,043 பேர். சிங்கப்பூர் பெண்கள் மணந்துகொண்ட வெளிநாட்டு ஆண்களில் மூவரில் சமார் இரண்டு பேர் ஆசிய நாடுகளைச் சேர்ந்தவர்கள். இந்த விவரங்கள் மக்கள்தொகை சுருக்க அறிக்கை மூலம் தெரியவந்துள்ளன. 2020 மற்றும் 2021 அறிக்கைகளை அரசாங்கம் வெளியிட்டுள்ளது.