சிங்கப்பூரில் நேற்று நண்பகல் வாக்கில் புதிதாக 14 பேருக்கு கிருமித் தொற்று உறுதியானது.
அவர்கள் அனைவருமே வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள். அவர்களில் 13 பேருக்கு வீட்டிலேயே தனிமையில் இருக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.
மற்றொருவருக்கு முதலில் தொற்று இல்லை என்பது தெரியவந்தது. ஆனால் அவருக்கு தொற்று இருந்தது பின்னர் தெரியவந்தது.
சிங்கப்பூரில் கடந்த ஒரு வாரத்தில் புதிதாக எட்டுப் பேர் சமூகத்தொற்றுக்கு ஆளாகி இருக்கிறார்கள். அதற்கு முந்தைய வாரத்தில் ஒரே ஒருவர் மட்டுமே சமூகத்தொற்றுக்கு ஆளாகி இருந்தார்.
அந்த எட்டு பேரில் ஐந்து பேர் ஒருவருக்கொருவர் தொடர்பு இல்லாதவர்கள் என்று சனிக்கிழமை அமைச்சு அறிவித்து இருந்தது.
சனிக்கிழமையன்று சமூகத்தில் புதிதாக யாருக்கும் தொற்று இல்லை. இருந்தாலும் அன்று வெளிநாடுகளில் இருந்து வந்த ஒன்பது பேருக்குத் தொற்று இருந்தது தெரியவந்தது.
பிப்ரவரி 7ஆம் தேதிக்கும் கடந்த சனிக்கிழமைக்கும் இடையில் தொற்று கண்டறியப்பட்டதாக தெரிவிக்கப்பட்ட 111 பேரில் 52 பேருக்கு ஏற்கெனவே தொற்று இருந்திருக்கிறது என்பது தெரியவந்தது.
30 பேருக்குத் தொற்று இல்லை. 29 பேரின் பரிசோதனை முடிவுகள் இனிமேல்தான் வரவேண்டும் என்று அமைச்சு தெரிவித்தது.
சிங்கப்பூரில் கொவிட்-19 தொற்றுக்கு ஆளானோரின் மொத்த எண்ணிக்கை 59,800 ஆக இருக்கிறது.