எம்ஆர்டி ரயில்களில் ஆர்ப்பாட்டம் நடத்திய ஜோலோவனுக்கு $8,000 அபராதம் விதிக்கப்பட்டது

எம்ஆர்டி ரயில்களில் ஆர்ப்பாட்டம் நடத்திய ஜோலோவனுக்கு $8,000 அபராதம் விதிக்கப்பட்டது

1 mins read
cd7337d9-b425-4a79-a74f-60b09ede9f7c
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

எம்­ஆர்டி ரயில்­களில் சட்­ட­விரோத பொதுக் கூட்­டம் நடத்­தி­ய­தன் தொடர்­பில் மூன்று குற்­றச்­சாட்­டு­களை மனித உரிமை ஆர்­வ­லர் ஜோலோ­வன் வாம் ஒப்­புக்­கொண்­டதை அடுத்து நேற்று அவ­ருக்கு $8,000 அப­ரா­தம் விதிக்­கப்­பட்­டது.

மூன்று ஆண்­டு­க­ளுக்கு முன் நடந்த இச்­சம்­ப­வத்­தில் ஒன்­பது பேர் கொண்ட கும்­பல் ஒன்று, 1987ஆம் ஆண்­டில் நடந்த உள்­நாட்­டுப் பாது­காப்பு செயற்­பாட்­டின் 30வது ஆண்டு நிறைவை முன்­னிட்டு கூடி­யது.

வடக்கு நோக்­கி­யும் தெற்கு நோக்­கி­யும் சென்­று­கொண்­டி­ருந்த ரயில்­களில் ஜூன் 3, 2017ல் சுமார் இரண்டு மணி­நே­ர­ம் கும்­ப­லைச் சேர்ந்­த­வர்­கள் ஆர்ப்­பாட்­டம் செய்­த­னர்.

கண்­க­ளைக் குப்­பைப் பைகளால் கட்­டி­ய­வாறு 1987ல் நடந்த செயற்­பாடு தொடர்­பான புத்­த­கம் ஒன்­றைக் கைகளில் ஏந்தி­யி­ருந்­த­னர்.

அனு­ம­தி­யின்­றிப் பொது இடத்­தில் கூட்­டம் நடத்­து­வது தொடர்­பில் குற்­றச்­சாட்டை எதிர்­நோக்கு­வது வாமுக்கு இது இரண்­டாவது முறை. அத்­து­டன் போலிஸ் அறிக்­கை­யி­லும் வாம் கையெ­ழுத்­திட மறுத்­த­தா­கக் கூறப்­பட்­டது.

குறிப்புச் சொற்கள்