குடும்பங்களுக்கு $900 மில்லியன்; பற்றுச்சீட்டுகளும் உண்டு

குடும்பங்களுக்கு $900 மில்லியன்; பற்றுச்சீட்டுகளும் உண்டு

3 mins read
f6db730a-3d5c-474b-b604-a54378f6e5fe
$900 மில்லியன் ஆதரவுத் தொகுப்புத் திட்டம் குடும்பங்கள் செலவுகளைச் சமாளிக்க உதவும். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

கொவிட்-19 நெருக்­க­டி காரணமாக நிலை­யற்ற பொரு­ளி­யல் சூழ­லால் பாதிக்­கப்­பட்­டி­ருக்­கும் நிலை­யில் குடும்­பங்­க­ளுக்­கான ஆத­ர­வுத் தொகுப்­புத் திட்­டம் அறி­விக்­கப்­பட்டுள்­ளது.

நேற்று நாடா­ளு­மன்­றத்­தில் 2021 நிதியாண்டுக்கான வர­வு­செ­ல­வுத் திட்­டத்தை வெளியிட்ட துணைப்­பி­ர­த­ம­ரும் நிதி­ய­மைச்­ச­ருமான ஹெங் சுவீ கியட், $900 மில்­லி­யன் தொகை இந்தத் திட்டத்திற்காக ஒதுக்­கப்­பட்­டுள்­ள­தாக அறி­வித்­தார்.

இந்த ஆத­ர­வுத் தொகுப்­புத் திட்­டத்­தில் பற்­றுச்­சீட்­டு­கள் வழங்­கப்­படு­வ­தும் உள்­ள­டங்­கும். இந்­தப் பற்­றுச்­சீட்­டு­கள் நெருக்­கடி காலத்­தில் குடும்­பத்­திற்­குத் தேவை­யான அத்­தி­யா­வ­சி­யப் பொருள்­களை வாங்­கு­வ­தற்­கான செல­வு­களை ஈடு­கட்­டும். அத்­து­டன், உள்­ளூர் வர்த்­த­கர்­களுக்­கும் ஆத­ர­வாக இருக்­கும். வீடு­க­ளுக்­கான சேவை மற்­றும் பரா­ம­ரிப்­புக் கட்­ட­ணக் கழி­வு­கள், பொருள் சேவை வரி (ஜிஎஸ்டி) பற்­றுச்­சீட்­டு­களும் இந்­தத் திட்­டத்­தில் அடங்­கும்.

$100 பற்­றுச்­சீட்டு

ஏறக்குறைய 1.3 மில்­லி­யன் குடும்­பங்­கள் $100 சமூக மேம்­பாட்டு மன்­றப் பற்­றுச்­சீட்­டு­க­ளைப் பெறும். அந்­தப் பற்­றுச்­சீட்­டு­களை உள்­ளூர்க் கடை­கள் மற்­றும் உண­வங்­காடி நிலையங்­களில் செல­வி­ட­லாம். இது­கு­றித்த மேல் விவ­ரங்­களைச் சமூக மேம்­பாட்டு மன்­றம் பின்­னர் வெளி­யி­டும். இந்த நிதிக்­காக சமூக மேம்­பாட்டு மன்­றங்களுக்கு கூடு­தல் நிதி­யாக $150 மில்­லி­யன் ஒதுக்­கப்­ப­டு­கிறது.

குடும்­பங்­க­ளுக்கு உத­வும் இந்தத் திட்­டம் சிங்­கப்­பூ­ரர்­க­ளின் ஒற்­றுமை உணர்­வுக்கு நன்றி செலுத்­தும் வகை­யில் இருந்­தா­லும் அது உள்­ளூர் வர்த்­தகங்­க­ளுக்­கும் உண­வங்­கா­டிக் கடைக்­கா­ரர்­களுக்கும் தொடர்ந்து ஆத­ரவு அளிப்­ப­தாகவும் இருக்­கும்.

கொரோனா தொற்­றுக்கு எதிரான சிங்­கப்­பூ­ரின் போராட்­டத்­தில் சிங்­கப்­பூ­ரர்­கள் முகக்­க­வ­சம் அணி­வது, பாது­காப்பு இடை­வெளியைக் கடைப்பிடிப்பது உள்­ளிட்ட பாது­காப்பு முன்­னெச்­சரிக்கை நட­வ­டிக்­கை­களை ஒற்­று­மை­யு­ட­னும் கட்­டுப்­பாட்­டு­டனும் கடைப்­பி­டித்­த­னர்.

தொற்­றுக்கு எதி­ரான பாது­காப்பு முன்­னெச்­ச­ரிக்கை நட­வ­டிக்­கை­களா­லும் கிரு­மிப் பர­வலை முறி­ய­டிப்­ப­தற்­கான நட­வ­டிக்­கை­க­ளா­லும் உள்­ளூர் வர்த்­த­கர்­களும் உண­வங்­கா­டிக் கடைக்­கா­ரர்­களும் பெரி­தும் பாதிக்­கப்­பட்­ட­னர்.

பாது­காப்பு நட­வ­டிக்­கை­யைப் பின்­பற்­று­வ­தில் அவர்­க­ளின் புரிந்­து­ணர்­வும் கட்­டுப்­பா­டும் மிக­வும் முக்­கி­ய­மா­னவை என்று திரு ஹெங் கூறி­னார்.

சேவை மற்­றும் பரா­ம­ரிப்­புக் கட்­ட­ணக் கழிவு

குடும்ப ஆத­ர­வுத் தொகுப்­புத் திட்­டத்­தின்கீழ் வீவக வீடு­களில் வசிக்­கும் தகு­தி­பெ­றும் சிங்­கப்­பூர் குடும்பங்களுக்குச் சேவை மற்­றும் பரா­மரிப்­புக் கட்­ட­ணக்கழிவு வழங்­கப்­படும். இந்த ஆண்­டு ஒன்­றரை மாதம் முதல் மூன்­றரை மாதங்­க­ள் வரையிலான கட்­ட­ணக்கழிவு வழங்­கப்­படும் என்று திரு ஹெங் கூறி­னார்.

ஏறக்­கு­றைய 950,000 சிங்­கப்­பூர் குடும்பங்கள் இந்த ஆண்­டின் ஏப்­ரல், ஜூலை, அக்­டோ­பர் ஆகிய மாதங்­களி­லும் அடுத்த ஆண்டு ஜன­வ­ரி­ மாதத்திலும் கட்­ட­ணக் கழி­வுச் சலு­கை­யைப் பெறு­வர்.

சிறப்பு உத­வித்­தொ­கை­யாக $200 ஜிஎஸ்டி பற்­றுச்­சீட்டு

வழக்­க­மான ஜிஎஸ்டி பற்­றுச்­சீட்­டு­டன், குறைந்த வரு­மா­னம் ஈட்­டும் சிங்­கப்­பூ­ரர்­களில் ஏறக்குறைய 1.4 மில்­லி­யன் பேர் கூடு­தல் சிறப்பு உத­வித்­தொ­கை­யாக வரும் ஜூன் மாதத்­தில் $200 ஜிஎஸ்டி பற்­றுச்­சீட்டு­க­ளைப் பெறு­வர்.

ஜிஎஸ்டி-யு-சேவ் சிறப்பு உத­வித்­தொகை மூலம் சுமார் 950,000 குடும்­பங்­கள் கூடு­தல் உத­வித் தொகை­யாக $120 முதல் $200 பய­னீட்­டுக் கட்­ட­ணக் கழி­வைப் பெறு­ம். இது ஏப்­ரல் மற்­றும் ஜூலை மாதங்­களில் கிடைக்­கும். இதன் மூலம் குடும்­பங்­கள் வழக்­க­மா­கப் பெறும் ஆண்­டுக் கழி­வுக் கட்­ட­ணத்­தைக் காட்­டி­லும் ஒன்­றரை மடங்கு அதி­கம் பெறும்.

21 வயதுக்குக் குறைந்தோருக்கு $200

21 வய­துக்­குக் குறைந்த சிங்­கப்­பூ­ரர்­களுக்கு குழந்தை மேம்பாட்டுக் கணக்கு, எடு­சேவ் அல்­லது உயர்­நி­லைக் கல்­விக்­குப் பிந்­திய கணக்கில் $200 நிரப்­பப்­படும். அந்­தத் தொகையை கல்வி சார்ந்த செல­வினங்களுக்குப் பயன்­ப­டுத்­திக் கொள்­ள­லாம். இத­னால் சுமார் 780,000 சிறார்­கள் பயன்­பெ­று­வர்.

கொவிட்-19 கொள்­ளை­நோய் அனைத்து சமூ­கங்­க­ளை­யும் கடு­மை­யான நெருக்­க­டிக்கு உள்­ளாக்கி உள்­ளது. அத்­து­டன், அவர்­கள் ஒரு சமூ­க­மா­கத் தங்­களை எவ்­வாறு ஒழுங்­குபடுத்திக்கொள்கி­றார்­கள் என்­ப­து­டன் ஒன்­று­பட்ட மக்­க­ளாக அவர்­க­ளின் பண்­பு­நெ­றி­க­ளை­யும் எடுத்­துக்­காட்­டு­கிறது என்று இந்த வர­வு­செ­லவுத் திட்ட உரை­யின் நிறை­வில் நிதி­ அமைச்­சர் ஹெங் சுவீ கியட் குறிப்­பிட்­டார்.

ஒரு­வ­ருக்­கொ­ரு­வர் ஆத­ர­வ ளிக்க சிங்­கப்­பூ­ரர்­கள் ஒன்று திரண்­டுள்­ள­னர். முன்­னெச்­ச­ரிக்கை நட­வ­டிக்­கை­களை எடுத்­துக்­கொள்­வ­தும், எவ்­வ­ளவு சிர­ம­மாக இருந்­தா­லும் ஒரு­வ­ருக்­கொ­ரு­வர் பாது­காப்­பாக இருப்­ப­தற்­கும் ஒவ்­வொ­ரு­வ­ரும் தனது பங்­கைச் செய்து வரு­கின்­ற­னர் என்­றும் அவர் சொன்­னார்.

கடந்த ஆண்டு, சிங்­கப்­பூ­ரர்­கள் கொண்­டுள்ள பண்­பு­நெ­றி­களை முக்­கி­ய­மாக வெளிப்­ப­டுத்­தி­யது. அத்­து­டன், தனிப்­பட்ட செயல்­களுக்கு அப்­பால், ஒன்­று­பட்ட சமூ­க­மாக மக்­கள் இதனை எதிர்­கொண்­டது பெரு­மைக்­கு­ரி­யது என்­றார் திரு ஹெங். சிங்­கப்­பூ­ரர்­கள் தொடர்ந்து எதிர்­கா­லத்­தில் கவ­னம் செலுத்த வேண்­டும் என்­றும் தெளி­வான திசை­யை நோக்கிச் செல்ல வேண்­டும் என்­றும் திரு ஹெங் கேட்­டுக்­கொண்­டார்.

தொலை­நோக்குச் சிந்­தனை, பரு­வ­நிலை மாற்­றம், எதிர்­கால தொற்­று­நோய்­கள் போன்ற நீண்­ட­கால சவால்­களை எதிர்­கொள்­வதும் சிங்­கப்­பூ­ரி­லும் உல­கெங்­கி­லும் உள்ள மக்­க­ளு­டன் பங்­கா­ளித்­து­வங்­களைப் பெருக்கிக்­கொள்­வ­தும் முக்­கி­யம் என்­றார் திரு ஹெங்.