நடுத்தர ஊதிய துறைகளுக்கு படிப்படியான சம்பள உயர்வு

நடுத்தர ஊதிய துறைகளுக்கு படிப்படியான சம்பள உயர்வு

2 mins read
9b121c7b-d080-449b-bd00-46c056f7d7a0
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

தேர்ச்­சி­க­ளோடு சம்­ப­ள­மும் படிப்­படி­யாக உய­ரும் ஏற்­பாட்டை விரி­வு­படுத்த என்­டி­யுசி முயற்­சி­களை மேற்­கொண்டு வரு­கிறது.

அதில் வெற்றி கிடைத்­தால் குறிப்­பிட்ட தொழில்­து­றை­க­ளைச் சேர்ந்த நடுத்­தர வரு­வாய் ஊழி­யர்­க­ளுக்­கும் படிப்­ப­டி­யாக சம்­பளம் உய­ரும் முறை நடப்­புக்கு வரக்­கூடிய வாய்ப்பு இருக்­கிறது.

பட்டா நிர்­வா­கம், சூரிய சக்தி தொழில்­நுட்­பம், பூச்­சிக்கொல்லித் துறை போன்­ற­வற்­றின் முத­லா­ளி­களு­டன் இதன்­ தொ­டர்­பில் என்டியுசி பேசி வரு­வ­தாக அதன் தலை­மைச் செய­லா­ள­ரான இங் சீ மெங் நேற்று தெரி­வித்­தார்.

படிப்­ப­டி­யாக உய­ரும் சம்­பள முறை, பல்­வேறு தேர்ச்சிநிலை­களி­லும் ஊழி­யர்­க­ளுக்­குப் பயிற்­சித் தேவை­க­ளை­யும் குறைந்­த­பட்ச சம்­ப­ளத்­தை­யும் நிர்­ண­யிக்­கிறது.

தொழில்­து­றை­க­ளுக்­குப் பதி­லாக பல வேலை­க­ளுக்­கு சம்­ப­ளத்­தை­யும் தேர்ச்சி நிலை­க­ளை­யும் நிர்­ண­யித்து அதன்­மூ­லம் இந்­தச் சம்­பள ஏற்­பாட்­டில் புதிய அணு­கு­மு­றை­யைக் கைக்­கொள்­வ­தன் தொடர்­பில் சாதா­ரண நிலை­யில் பேச்­சு­வார்த்தை நடப்­ப­தா­க­வும் அமைச்­சர் கூறி­னார்.

திரு இங், தொழிற்­சங்க இயக்­கத்­தின் இந்த ஆண்­டிற்­கான முன்­னு­ரி­மை­கள் பற்றி மெய்­நி­கர் ஊட­கக் கூட்­டத்­தில் பேசி­னார்.

எழுத்­தர்­கள், இயந்­தி­ரங்­களை இயக்­கு­ப­வர்­கள், மின்­சா­ரத் துறை ஊழி­யர்­கள் உள்­ளிட்­டோரை இந்த வேலை­கள் உள்­ள­டக்­கும் என்­றும் அமைச்­சர் குறிப்­பிட்­டார்.

முத்­த­ரப்புப் பங்­கா­ளி­கள் சிலரு­டன் இப்­போது சாதா­ரண நிலை­யில் விவா­திப்­பு­கள் நடந்து வரு­வ­தா­க­வும் அடுத்த மூன்று முதல் ஐந்து ஆண்­டு­க­ளுக்­குள் கொஞ்­சம் முன்­னேற்­றம் காண­லாம் என்று தான் நம்­பு­வ­தா­க­வும் திரு இங் தெரி­வித்­தார்.

படிப்­ப­டி­யாக உய­ரும் சம்­பள முறை, பொரு­ளி­ய­லின் ஒவ்­வொரு துறை­யி­லும் ஏதோ ஒரு வகை­யில் இடம்­பெற வேண்­டும் என்­பதே அர­சாங்­கத்­தின் விருப்­பம் என்று நாடாளு­மன்­றத்­தில் கடந்த செவ்­வாய்க்­கி­ழமை வர­வு­செ­ல­வுத் திட்­டத்­தைத் தாக்­கல் செய்து பேசி­ய­போது துணைப் பிர­த­மர் ஹெங் சுவீ கியட் தெரி­வித்­தார்.

அந்தச் சம்­பள முறையை முதன்­மு­த­லாக 2012ல் என்­டி­யுசி நடப்­புக்­குக்கொண்டு வந்­தது.

இப்­போது துப்­பு­ரவு, நில வடி­வ­மைப்பு, பாது­கா­வல் ஆகிய துறை­களில் அந்த முறை கட்­டா­ய­மாக்கப்பட்டுள்ளது.

அதன் மூலம் ஏறக்குறைய 80,000 ஊழி­யர்­கள் பல­ன­டை­கி­றார்­கள். மின்­தூக்கி மற்­றும் விசைப்­படி பரா­மரிப்­புத் துறை­யில் 2022ல் இந்த ஏற்­பாடு கட்­டா­ய­மாக்­கப்­படும்.

படிப்­ப­டி­யாக உய­ரும் சம்­பள முறையை உணவு சேவை­கள், சில்­லறை வர்த்­த­கம் ஆகிய துறை­களில் அமல்­ப­டுத்­து­வ­தற்­கான பரிந்­து­ரை­கள் இந்த ஆண்­டில் வெளி­யி­டப்­பட்டு இரண்டு முதல் மூன்­றாண்டு காலத்­துக்­குள் நடப்­புக்கு வரும் என்று தான் நம்­பு­வ­தா­க­வும் திரு இங் குறிப்­பிட்­டார். இந்­தத் து­றை­களில் ஏறத்தாழ 70,000 ஊழி­யர்­கள் பணி­யாற்­று­கி­றார்­கள்.

இத­னி­டையே, ஒப்­பந்த ஊழி­யர்­களை இன்­னும் சிறப்­பாக பிரதி­நி­திக்­கும் வகை­யில் சட்­டத்தைத் திருத்­து­வ­தற்கு என்­டி­யுசி நெருக்கும் என்­றும் திரு இங் தெரி­வித்­தார்.

இத்­த­கைய ஒப்­பந்த ஊழி­யர்­கள் கிட்டத்தட்ட 200,000 பேர் இருக்­கி­றார்­கள் என்­பதை என்­டி­யு­சி­யின் தலை­மைச் செய­லா­ள­ர் சுட்­டி­னார்.

கொவிட்-19லிருந்து மீண்டு வர சிங்­கப்­பூர் அரும்­பா­டு­படும் இந்த ஆண்­டில் தொழிற்­சங்க அமைப்­பின் முன்­னு­ரி­மை­களில் இது­வும் ஒன்று என்று செய்­தி­யா­ளர்­க­ளி­டம் அவர் குறிப்­பிட்­டார்.