சிங்கப்பூரில் 69% புதிய பட்டதாரிகளுக்கு வேலை கிடைத்துள்ளது

சிங்கப்பூரில் 69% புதிய பட்டதாரிகளுக்கு வேலை கிடைத்துள்ளது

2 mins read
e9b91475-5185-4f09-bf2e-763890c96e09
கோப்புப்படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சிங்­கப்­பூ­ரில் உள்­ளூர் பல்­க­லைக்­க­ழ­கங்­களில் கல்வி பயின்ற பட்­ட­தா­ரி­களில் பெரும்­பா­லோ­ருக்கு சென்ற ஆண்டு வேலை கிைடத்­த­து­டன் அவர்­க­ளின் சராசரி சம்­ப­ள­மும் உயர்ந்த நிலை­யி­லேயே இருந்­தது. அத்­து­டன், தக­வல், மின்­னி­லக்­கத் தொழில்­நுட்­பத் துறை­களில் முழுநேர வேலை கிடைக்­கப் பெற்ற­வர்­கள் மற்­ற­வர்­க­ளை­விட மிக உயர்ந்த சம்­ப­ளத்­தைப் பெறும் நிலை­யும் ஏற்­பட்­டது.

ஆனால், கொள்­ளை­நோய்ச் சூழ­லால் சென்ற ஆண்டு பல பட்­ட­தா­ரி­கள் பகு­தி­நேர வேலை­கள், அல்­லது வேலைப் பயிற்­சி­யில் ஈடு­பட்­ட­னர். இதில் ஐந்­தில் ஒரு பட்­ட­தாரி பகு­தி­நேர வேலை­யில் ஈடு­பட வேண்­டிய நிலை ஏற்­பட்­டது.

இதன் தொடர்­பில் நேற்று வெளி­யி­டப்­பட்ட பட்­ட­தாரி வேலை­வாய்ப்பு ஆய்­வின்­படி, 2019ஆம் ஆண்­டில் $3,600ஆக இருந்த புதிய பட்­ட ­தா­ரி­க­ளின் சராசரி சம்­ப­ளம் சென்ற 2020ஆம் ஆண்­டில் $3,700ஆக உயர்ந்­தது. கொவிட்-19 சூழ­லில் நடத்­தப்­பட்ட முதல் வேலை தொடர்­பான ஆய்வு இது என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

ஒட்­டு­மொத்­த­மாக பார்த்­தால், இறுதி ஆண்டு தேர்வு எழுதி ஆறு மாதங்­க­ளி­லேயே வேலை கிடைத்­தோ­ரின் விகி­தம் 93.6 விழுக்­கா­டாக இருந்­தது. இதுவே, 2019ஆம் ஆண்டு 90.7 விழுக்­கா­டாக இருந்­த­தாக ஆய்வு சுட்­டு­கிறது.

கணினி அறி­வி­யல், இணையப் பாது­காப்பு, மென்­பொ­ருள் பொறி­யி­யல் போன்ற துறை­க­ளைச் சேர்ந்­தோர் சராசரி சம்­ப­ளத்தின் உச்சமாக $4,760 பெற்­ற­னர் என்­றும் இந்­தத் துறை­களில் நிரந்­தர முழு­நேர வேலை­யில் அமர்த்­தப்­பட்­டோ­ரின் விகி­தம் 87.3 விழுக்­கா­டாக இருந்­தது என்­றும் ஆய்வு தெரி­விக்­கிறது. எனி­னும், ஆண்டு அடிப்­ப­டை­யில் சென்ற ஆண்டு நவம்­பர் மாதம் நடத்­தப்­பட்ட இந்த ஆய்­வில் நிரந்­தர, முழு­நேர வேலை கிடைத்த பட்­ட­தா­ரி­க­ளின் விகி­தம் 69.8 விழுக்­காட்­டுக்கு வீழ்ச்சி கண்­ட­தாக அது கூறி­யது.

இதுவே, 2019ஆம் ஆண்­டில் 81.7 விழுக்­கா­டாக இருந்­த­தா­க­வும் ஆய்வு சுட்­டி­யது. இதேேபால், சென்ற ஆண்டு பகு­தி ­நேர அல்­லது தற்­கா­லிக வேலைக்­குச் சென்ற பட்­ட­தா­ரி­க­ளின் விகி­தம் 22.3 விழுக்­கா­டாக இருந்­த­தா­க­வும், ஒப்­பு­நோக்க 2019ஆம் ஆண்­டின் விகி­தம் 7 விழுக்­கா­டாக இருந்­த­தா­க­வும் ஆய்வு கோடி­காட்­டு­கிறது.

சென்ற ஆண்­டில் பகு­தி­நேர வேலைக்­குச் சென்ற பாதிப்­பேர், அதா­வது 11.3 விழுக்­காட்­டி­னர் தாங்­க­ளா­கவே அவ்­வாறு செய்­த­தாக ஆய்வு விளக்­கி­யது. ஒப்­பு­நோக்க, கடந்த 2019ஆம் ஆண்­டில் இந்த விகி­தம் 2.4 விழுக்­கா­டாக இருந்­த­தாக ஆய்வு தெளி­வு­ப­டுத்­தி­யது. மேலும், பகு­தி­நேர அல்­லது பயிற்­சித் திட்­டங்­களில் சேர்ந்த நான்­கில் மூன்று பட்­ட­தா­ரி­களுக்கு மேல் எஸ்ஜி­ஒற்றுமை பயிற்­சித் திட்­டத்­தில் கலந்­து­கொண்­டுள்­ள­தாக ஆய்வு தெரி­விக்­கிறது.