மனம் இருந்தால் மார்க்கம் உண்டு

மனம் இருந்தால் மார்க்கம் உண்டு

2 mins read
c7073b5d-e2b0-44d3-a71c-d0ea6ec511f4
தன்னம்பிக்கையைக் கைவிடாத சபர்னா. படம்: தமிழ் முரசு -

விக்­டோ­ரியா தொடக்­கக் கல்­லூ­ரி­யில் பயின்­ற­போது இடி­யாய் வந்து விழுந்­தது சபர்­னா­வுக்கு வந்த Hodgkin lymphoma என்­னும் ஒரு­வித புற்­று­நோய். 2019ஆம் ஆண்டு மார்ச் மாதத்­தி­லி­ருந்து அடிக்­கடி மருத்­து­வ­ம­னைக்குச் செல்­ல­வேண்­டிய கட்­டா­யம் ஏற்­பட்­ட­தால் கிட்­டத்­தட்ட ஆண்டு முழு­வ­தும் சபர்­னா­வால் பள்­ளிக்குச் செல்­ல­மு­டி­ய­வில்லை.

"தொடக்­கத்­தில் நிறைய பய­மும் பதற்­ற­மும் இருந்­தன. ஆனால் காலப்­போக்­கில் எனக்கு அது பழகி­விட்­டது. என் வாழ்க்­கையைச் சிறப்­பாக வழிநடத்த கற்­றுக்­கொண்­டேன். சூழ்­நி­லையை மாற்­றி­ யமைக்க முயற்சி செய்­வ­தை­விட, அந்தச் சூழ்­நி­லைக்­கேற்ப என்னை மாற்­றிக்­கொண்டு பிரச்­சினை­களைத் தீர்க்­கும் வழி­க­ளைக் கண்டு­பி­டிப்­பது சாமர்த்­தி­ய­மான ஒன்று என்­பதை இந்த இரண்­டாண்டு­களில் நான் கற்­றுக்­கொண்­டேன்," என்று கூறிய சபர்னா, சிகிச்­சை­யின்போதும் உடல்­நிலை சரி­யில்­லா­மல் இருந்­த­போ­தும்­ நம்­பிக்­கை­யை இழக்காமல் திட­மாக இருந்­தார்.

இந்த சவால்­க­ளி­லி­ருந்து மீண்டு­வர சபர்­ணா­விற்குத் துணை­யாக நின்­றது அவ­ரது குடும்­பம். மருத்­துவ நிபு­ணர்­க­ளி­ட­மி­ருந்து சிகிச்­சைக்­கான ஆலோ­ச­னையைப் பெற உத­விய அண்­ணன், சபர்­ணா­வின் உடல் ஆரோக்­கி­யத்­திற்­காக வீட்­டில் உணவு பழக்­க­வ­ழக்­கங்­களை மாற்றி, தூங்­கும் நேரத்­தை­யும் மாற்றி துணை­யாக நின்ற பெற்­றோர் என குடும்­பத்­தின் அன்­பும் அர­வ­ணைப்­பும் இவ­ருக்கு கிடைத்­தன.

வீட்­டி­லும் பள்­ளி­யி­லும் கிடைத்த ஆத­ர­வால் சபர்னா மீண்­டும் தமது படிப்­பைத் தொடர்ந்­தார். கிரு­மிப் பர­வலை முறி­ய­டிக்­கும் திட்­டம்­

ந­டப்­பில் இருந்­த­போ­தும் அதற்­குப் பின்­ன­ரும் இணை­யம் வழி கற்­றல் அதி­க­மா­ன­போது தொழில்­நுட்­பத்­தைத் திறம்­பட பயன்­ப­டுத்தி தனது கற்­றல் வேகத்தைத் துரி­தப்­ப­டுத்­தி­னார்.

இணை­யம் வழி கற்­றல் சபர்னாவுக்கு ஒரு வர­மாக அமைந்­தது. பாடங்­களும் மற்ற பல நட­வடிக்­கை­களும் இணை­யத்­திற்கு கொண்­டு­வ­ரப்­பட்­ட­தால் சபர்னா அனைத்­தி­லும் பங்­கு­பெற்று, முழு­மை­யான பள்ளி வாழ்க்­கையை அனு­ப­விக்க வாய்ப்பு கிடைத்­த­தாகக் கூறி­னார். தனது வாழ்க்­கை­யின் மிக கடி­ன­மான கால­கட்­டத்­தில், சபர்னா தமது பாதை­யில் உள்ள இடை­யூ­று­களைச் சமா­ளித்து படிப்­பில் கவ­னம் செலுத்­தி­னார். மனம் இருந்­தால் மார்க்கம் உண்டு என்­ப­தற்கு ஏற்ப தமக்கு ஏற்பட்ட சவால்களை முறியடித்து தொடக்­கக்­ கல்­லூரி கல்­வியை சபர்னா வெற்­றி­க­ர­மாக முடித்துள்ளார்.