இவ்வாண்டு ஜனவரி முதல் 2வது பிள்ளை உடைய பெற்றோரின் குழந்தை மேம்பாட்டுக் கணக்கில் $9,000

இவ்வாண்டு ஜனவரி முதல் 2வது பிள்ளை உடைய பெற்றோரின் குழந்தை மேம்பாட்டுக் கணக்கில் $9,000

2 mins read
61dce429-2a6a-47dd-9250-cf8cd6eb42ab
-

இவ்­வாண்டு ஜன­வரி மாதத்­தி­லி­ருந்து இரண்­டா­வது பிள்ளை உடைய பெற்­றோ­ருக்கு குழந்தை மேம்­பாட்­டுக் கணக்கு மூலம் கூடு­தல் நிதி­யாக $9,000 கிடைக்­கும்.

தற்­போது முத­லா­வது, இரண்­டா­வது பிள்­ளைக்கு பெற்­றோ­ருக்கு $3,000 வழங்­கப்­ப­டு­கிறது. அது இனி $6,000 ஆக உயர்த்­தப்­ப­டு­கிறது. இது முன்பு முதல் பிள்­ளைக்கு வழங்­கப்­பட்டு வந்த $3,000க்கு மேல் கூடு­தல் நிதி­யாக அளிக்­கப்­ப­டு­கிறது என்று பிர­த­மர் அலு­வ­லக அமைச்­சர் இந்­தி­ராணி ராஜா தெரி­வித்­தார்.

இந்­தக் கூடு­தல் நிதி மூலம் கிட்­டத்­தட்ட 12,000 பிள்­ளை­கள் ஆண்­டு­தோ­றும் பயன்­பெ­று­கின்­றன. இது இரண்­டா­வது பிள்­ளை­யாக ஜன­வரி 1ம் தேதி மற்­றும் அதற்­குப் பிறகு பிறக்­கும் சிங்­கப்­பூர் பிள்­ளை­க­ளுக்­குப் பொருந்­தும்.

குழந்தை போனஸ் திட்­டத்­தின் கீழ், குழந்தை மேம்­பாட்­டுக் கணக்­கில் பெற்­றோர் நிரப்­பும் பணத்­துக்கு வெள்­ளிக்கு வெள்ளி அர­சாங்­கம் ஒரு வரம்பு வரை நிதி ஆத­ரவு அளிக்­கும்.

இந்த அதி­க­ரிப்­பு­டன், இரண்­டா­வது பிள்­ளை­யின் குழந்தை மேம்­பாட்­டுக் கணக்­குக்கு அர­சாங்­கத்­தின் மொத்த பங்­க­ளிப்பு $9,000 ஆகிறது.

இது முத­லா­வது, இரண்­டா­வது பிள்­ளைக்கு $6,000, மூன்­றா­வது, நான்­கா­வது பிள்­ளைக்கு $12,000, அதற்கு அடுத்­துள்ள பிள்ளை மற்­றும் பிள்­ளை­க­ளுக்கு $18,000 என்று அர­சாங்­கம் வழங்கி வந்த ஆத­ரவு நிதி­யின் அளவு உயர்­கிறது.

குழந்தை மேம்­பாட்­டுக் கணக்­கில் உள்ள தொகை­யைக் கொண்டு அங்­கீ­கா­ரம் பெற்ற கழ­கங்­கள் வழங்­கும் குழந்­தைப் பரா­ம­ரிப்­புக்­கான கட்­ட­ணம், மருத்­து­வச் செல­வு­கள் மற்­றும் இதர செல­வு­கள் என்று பிள்­ளை­க­ளின் செல­வு­க­ளுக்­குப் பயன்­ப­டுத்­திக்­கொள்­ள­லாம்.

ஒரு பிள்­ளைக்கு மேற்­பட்ட பிள்­ளை­க­ளைப் பெற்­றுக்­கொள்­ளும் சிங்­கப்­பூ­ரர்­க­ளுக்கு மேம்­பட்ட நிதி ஆத­ரவு அளிக்­கும் நோக்­கத்­தில் இந்­தத் தொகை அதி­க­ரிப்பு அறி­விக்­கப்­பட்­டது என்­றார் தேசிய மக்­கள்­தொகை மற்­றும் திற­னா­ளர் பிரிவை மேற்­பார்­வை­யி­டும் குமாரி இந்­தி­ராணி.

ஒட்­டு­மொத்­த­மாக, இரண்­டா­வது பிள்­ளை பெற்­றுக்­கொள்­ளும் பெற்­றோ­ருக்கு $24,000 கிடைக்­கும். அதில் குழந்தை போனஸ் ரொக்­கப் பரிசு, குழந்தை ஆத­ரவு மானி­யம், புதிய குழந்­தை­க­ளுக்­கான மெடி­செவ் மானி­யம் ஆகி­யவை உள்­ள­டங்­கும்.

"பெரும்­பா­லான திரு­ம­ண­மான சிங்­கப்­பூ­ரர்­கள் இரண்டு அல்­லது அதற்கு மேற்­பட்ட குழந்­தை­க­ளைப் பெற்­றுக்­கொள்ள விருப்­பப்­பட்­டா­லும், குறிப்­பிட்ட எண்­ணிக்­கை­யி­ன­ருக்கு ஒரு குழந்­தை­தான் உள்­ளது.

"கடந்த ஆண்டு சிங்­கப்­பூ­ரின் குழந்தை பிறப்பு விகி­தம் 1.1 புள்ளி. அது சாதனை அள­வில் மிகக் குறைவு. இது 2018லும் 2019லும் இருந்த 1.4 புள்­ளிக்­கும் குறை­வா­னது, " என்­றார் அமைச்­சர்.

"கொவிட்-19 நிலைமை சிங்­கப்­பூ­ரர்­கள் தங்­கள் திரு­ம­ணத்­தைத் தள்­ளிப்­போட வைத்­துள்­ளது. அத­னால் 2019ல் நிகழ்ந்த திரு­ம­ணங்­க­ளை­விட கடந்த ஆண்­டில் சுமார் 10% குறை­வாக நடை­பெற்­றது. மற்­ற­வர்­கள் பெற்­றோ­ரா­கும் தங்­கள் திட்­டத்தை ஒத்­திப் போட்­டுள்­ள­னர்.

"குழந்­தை பிறப்பு விகி­தத்தை அதி­க­ரிப்­பது முன்­னே­றிய சமூ­கங்­க­ளில் பெரும் சவா­லாக உள்­ளது. இருப்­பி­னும், திரு­ம­ணம் புரிந்­து­கொண்டு பிள்ளை பெற்­றுக்­கொள்ள விருப்­பப்­ப­டு­வோ­ருக்கு நாம் தொடர்ந்து ஆத­ர­வ­ளிக்க வேண்­டும்," என்­றார் குமாரி இந்­தி­ராணி.

கடந்த ஆண்டு அக்­டோ­ப­ரில் கொள்­ளை­நோய் காலத்­தில் குழந்தை பெற்­றுக்­கொள்ள ஊக்­கு­விக்­கும் விதத்­தில், குழந்தை ஆத­ரவு மானி­யத் திட்­டம் அறி­முகப்­ப­டுத்­தப்­பட்­டது. இவ்­வாண்டு ஜன­வரி மாத இறு­தி­வரை, கிட்­டத்­தட்ட 10,000 குடும்­பங்­கள் $3,000 பெறும் இம்­மா­னி­யத்­தைப் பெற்­றுள்­ளன என்றும் அமைச்சர் கூறினார்.