ஓய்வுக்கால வயதை 63 ஆகவும் மறுவேலைவாய்ப்பு வயதை 68 ஆகவும் உயர்த்துவது திட்டமிட்டபடி அடுத்த ஆண்டு ஜூலை 1ஆம் தேதி இடம்பெறும் என்று மனிதவள அமைச்சர் ஜோசஃபின் டியோ நேற்று தெரிவித்தார்.
அதற்கு ஓராண்டிற்கு முன்னதாகவே இவ்வாண்டு ஜூலை 1 முதல், பொதுத் துறை அதன் 146,000 ஊழியர்களுக்கு ஓய்வுக்கால, மறுவேலைவாய்ப்பு வயதை உயர்த்த தனது கடப்பாட்டை நிறைவேற்றும் என்று அமைச்சர் டியோ சொன்னார்.
இதற்கிடையே, மூத்த ஊழியர்களுக்கான மத்திய சேம நிதி பங்களிப்பு விகிதம் உயர்த்தப்படுவது அடுத்த ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி திட்டமிட்டபடி இடம்பெறும்.