218,000 ஊழியருக்கு புதிய சம்பள முறை

218,000 ஊழியருக்கு புதிய சம்பள முறை

2 mins read

படிப்­ப­டி­யாக உய­ரும் சம்­பள முறை இப்­போது இருப்­ப­தைக் காட்­டி­லும் இரு­ம­டங்குக்கு மேல் அதிக ஊழி­யர்­களை உள்­ள­டக்­கும் விதத்­தில் விரி­வாக்­கப்­படும் என மனி­த­வள மூத்த துணை அமைச்­சர் ஸாக்கி முகம்­மது தெரி­வித்து உள்­ளார்.

தற்­போது 85,000 ஊழி­யர்­கள் இந்த சம்­ப­ள­மு­றை­யின்­கீழ் கொண்டு வரப்­பட்டு உள்­ள­னர். கூடிய விரை­வில் இந்த எண்­ணிக்கை 218,000 ஆக அதி­க­ரிக்­கும் என்று அவர் நேற்று நாடா­ளு­மன்­றத்­தில் கூறி­னார். உண­வுச் சேவை மற்­றும் சில்­லறை வர்த்­த­கத் துறை­களில் 80,000 உள்­ளூர் ஊழி­யர்­கள் வரை இந்த விரி­வாக்­கத்­தில் இடம்­பெ­று­வர். இந்­தத் துறை­க­ளில்­தான் குறைந்த வரு­மான ஊழி­யர்­கள் அதி­கம் உள்­ள­னர்.

இவர்­க­ளோடு வளா­கங்­க­ளுக்­குள் சுத்­தி­க­ரிப்­புப் பணி செய்­வோர், பாது­கா­வல் அதி­கா­ரி­கள், நில­வ­னப்­புப் பரா­ம­ரிப்பு ஊழி­யர்­கள் போன்ற மேலும் 50,000 ஊழி­யர்­களும் படிப்­ப­டி­யாக உய­ரும் சம்­ப­ள­முறை விரி­வாக்­கத்­தில் இடம்­பெ­று­வர். தற்­போது, வெளி­யி­லி­ருந்து அனுப்­பப்­படும் துப்­பு­ர­வா­ளர்­கள், பாது­கா­வ­லர்­கள் மற்­றும் நில­வ­னப்­புப் பரா­ம­ரிப்­பா­ளர்­க­ளுக்கு மட்­டும் இந்த சம்­பள முறை கட்­டா­ய­மாக்­கப்­பட்­டுள்­ளது. அடுத்த ஆண்டு முதல் மின்­தூக்கி, மின்­ப­டிக்­கட்­டுப் பரா­ம­ரிப்­புத் துறை­யில் உள்ள 2,400 ஊழி­யர்­க­ளுக்­கும் இந்­தச் சம்­பள முறை கட்­டா­ய­மா­கிறது.

அடுத்­த­கட்­ட­மாக கழிவு நிர்­வா­கத் துறை­யில் ஈடு­பட்­டி­ருக்­கும் ஊழி­யர்­க­ளுக்­கும் இதனை அறி­மு­கம் செய்­வ­தற்­கான பணி­கள் நடை­பெற்று வரு­கின்­றன. இதன் மூலம் இத்­து­றை­யில் 3,000 ஊழி­யர்­கள் வரை பல­ன­டை­வர்.

மனி­த­வள அமைச்­சின் வர­வு­செ­ல­வுத் திட்ட விவா­தத்­தில் பங்­கேற்­றுப் பேசிய திரு ஸாக்கி, புதிய துறை­க­ளுக்கு இந்த சம்­பள முறையை விரி­வாக்­கம் செய்­வ­தற்­காக அர­சாங்­கம், தொழி­லா­ளர் இயக்­கம், முத­லா­ளி­கள் சங்­கம் போன்­ற­வற்றை உள்­ள­டக்­கிய குழு ஏற்­ப­டுத்­தப்­பட்டு உள்­ளது என்­றார். இக்­குழு தனது பரிந்­து­ரை­களை இவ்­வாண்டு இறு­திக்­குள் அளிக்­கும் என்­றும் அவர் தெரி­வித்­தார்.

படிப்­ப­டி­யாக உய­ரும் சம்­ப­ள­

மு­றை­யின் பலன்­களை உதா­ர­ணம் ஒன்­றின் மூலம் திரு ஸாக்கி விளக்­கி­னார். எல்­வின் கோ, 50, என்­ப­வர் 2017ஆம் ஆண்டு பாது­கா­வல் துறை­யில் வேலை­யில் சேர்ந்­த­போது அவ­ருக்­கான மாதச் சம்­ப­ளம் $1,800. இந்­தச் சம்­ப­ள­மு­றை­யின் கீழ் திறன் பயிற்சி பெற்­ற­தன் மூலம் தற்­போது 50 விழுக்­காட்­டுக்­கும் அதி­க­மான சம்­பள உயர்வை அவர் பெற்­றுள்­ள­தாக அமைச்­சர் கூறி­னார்.

மற்ற துறை­களில் பணி­பு­ரி­யும் 80,000 சிங்­கப்­பூ­ரர்­கள், நிரந்­தர வாசி­கள் $1,000க்கும் குறை­வான சம்­ப­ளம் பெறு­வ­தாக பாட்­டா­ளிக் கட்சி உறுப்­பி­னர் கூறி­ய­தற்­குப் பதி­ல­ளித்த திரு ஸாக்கி, சில மணி நேரமே வேலை செய்­யக்கூடிய பகுதி­நேர ஊழி­யர்­களை உள்­ள­டக்­கிய கணக்கு அது என்­றார்.