தொழில்நுட்ப கல்விக்கழகத்தின் (ஐடிஇ) எல்லா மாணவர்களும் 'ஹையர் நைடெக்' தகுதிக்கான சான்றிதழ் பெறும் வழி எளிதாக்கப்படும் என்று கல்வி இரண்டாம் அமைச்சர் மாலிக்கி ஒஸ்மான் நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
"'ஹையர் நைடெக்' கல்வித் தகுதியைக் குறைந்தகாலத்தில் பெறும் வாய்ப்பை அதிகமான மாணவர்கள் பெறும் நோக்கில் ஐடிஇ பாடத்திட்டத்தை நெறிப்
படுத்த இருக்கிறோம். இவ்வாறு செய்வது நமது ஐடிஇ பட்டதாரிகள் ஆழ்ந்த தொழில் சார்ந்த திறன்களைப் பெற உதவும். அத்துடன் அவர் களின் எதிர்காலத் திறன் மேம்பாடுகளுக்கு வலுவான அடித்
தளத்தையும் இது அமைத்துத் தரும்," என்றார் அவர்.
நைடெக், ஹையர் நைடெக் என்னும் இரு கல்வித்தகுதிகளை நிறைவுசெய்ய பெரும்பாலான மாணவர்களுக்கு நான்காண்டுகள் தேவைப்படுகின்றன. இவற்றில் நைடெக் பாடத்தைக் கற்க மட்டும் ஈராண்டுகள் ஆகின்றன. ஹையர் நைடெக்கின் பெரும்பாலான பாடங்களுக்கும் கிட்டத்தட்ட இதே கால அளவு தேவைப்படுகிறது.
நைடெக் பாடங்களை நிறைவு செய்த பின்னர் 30 விழுக்காட்டு பட்டதாரிகள்
அரசாங்க நிதி ஆதரவு பெற்ற எந்த ஒரு வழியையும் நோக்கி முன்னேற இயலவில்லை என்று கல்வி அமைச்சர் லாரன்ஸ் வோங் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
ஐடிஇயில் சேரும்போதே ஹையர் நைடெக் கல்வித்தகுதி பெற வேண்டும் என்ற எல்லா மாணவர்களின் ஆசையையும் நிறைவேற்ற வேண்டும் என்பதே அரசாங்கத்தின் விருப்பம் என்றும் அவர் கூறினார்.