பலதுறைத் தொழிற்கல்லூரி மாணவர்களின் சவால்களுக்கும் வளர்ச்சிக்கும் இடையில் சம
நிலையைச் சிறந்த முைறயில் அளிக்கக்கூடிய பலதுறைத் தொழிற்கல்லூரி அடித்தளத் திட்டம் (பிஎஃப்பி) பிரபலமடைந்து வருகிறது. இதுபோன்ற வழிமுறைகளை பலதுறைத் தொழிற்கல்லூரியில் விரிவாக்கம் செய்வது பற்றி கல்வி அமைச்சு ஆராய்ந்து வருவதாக கல்வி இரண்டாம் அமைச்சர் மாலிக்கி ஒஸ்மான் தெரிவித்தார். பாடம் அடிப்படையில் 2024ஆம் ஆண்டுக்குள் இதனை முழுமையாக அமல்படுத்தும்போது உயர்
நிலைப் பள்ளி மாணவர்களின் வெவ்வேறு திறன்களுக்கு ஈடுகொடுக்கும் வகையில் பிஎஃப்பி எவ்வாறு செயல்படுகிறது என்பதை உணரமுடியும் என்றார் அவர்.