துவாஸ் விபத்து: தீவிர சிகிச்சைப் பிரிவிலிருந்து தீவிர கண்காணிப்புப் பிரிவுக்கு நால்வர் மாற்றம்

துவாஸ் விபத்து: தீவிர சிகிச்சைப் பிரிவிலிருந்து தீவிர கண்காணிப்புப் பிரிவுக்கு நால்வர் மாற்றம்

2 mins read
ee76d2e7-17eb-42bb-8760-56e3052c2f20
வெளிநாட்டு ஊழியர் நிலையம், கட்டட கட்டுமான மற்றும் மரத்துண்டு தொழிற்சாலைகள் ஊழியர்களின் சங்கம் ஆகியவற்றைச் சேர்ந்தவர்கள் மாண்டவர்களுக்கு நேற்று இறுதி மரியாதையைச் செய்தனர். நண்பர்கள், உறவினர்கள் என 30 பேர் அந்த நிகழ்வில் பங்கேற்றனர்.படம்: ஷின்மின் நாளிதழ் -

துவா­சில் ஒரு வாரத்­துக்கு முன்பு நிகழ்ந்த வெடிப்பு மற்­றும் தீச்­சம்­ப­வத்­தில் காய­ம­டைந்த 10 ஊழி­யர்­களில் நால்­வர் தீவிர சிகிச்­சைப் பிரி­வில் இருந்து தீவிர கண்காணிப் புப் பிரி­வுக்கு மாறி­யுள்­ள­னர்.

இந்­தத் தக­வலை வெளி­நாட்டு ஊழி­யர்­ நிலை­யம் தனது நேற்­றைய ஃபேஸ்புக் பதி­வில் குறிப்­பிட்­டி­ருந்­தது. அந்த ஊழி­யர்­கள் தங்­க­ளது குடும்­பத்­தா­ரு­டன் காணொளி அழைப்பு வாயி­லாக பேச­வும் அந்த நிலை­யம் ஏற்­பாடு செய்­தி­ருந்­தது.

அந்த விபத்­தில் காய­ம­டைந்த மற்­றோர் ஊழி­யர் தொடர்ந்து கவ­லைக்­கி­ட­மான நிலை­யில் சிகிச்­சை­பெற்று வரு­கி­றார்.

விபத்­தில் சிக்­கிய மூவர் உயி­ரி­ழந்த நிலை­யில், மற்ற இரு­வர் வீடு திரும்­பி­னர்.

கடந்த புதன்­கி­ழமை எண்32E துவாஸ் அவென்யூ 11ல் நிகழ்ந்த வெடிப்­புச் சம்­ப­வத்தை அடுத்து ஊழி­யர்­கள் மருத்­து­வ­ம­னைக்­குக் கொண்டு செல்­லப்­பட்­ட­னர். தீ பாது­காப்பு அமைப்­பு­க­ளைக் கையா­ளும் ஒப்­பந்த நிறு­வ­ன­மான ஸ்டார்ஸ் என்ஜி­னி­ய­ரிங் நிறு­வன வளா­கத்­தில் இந்த விபத்து நிகழ்ந்­தது.

அந்­தப் பகு­தி­யில் இருந்த 65 பேர் பாது­காப்­பான இடங்­க­ளுக்கு அப்­பு­றப்­ப­டுத்­தப்­பட்­ட­னர்.

அடைக்­கப்­பட்ட சூழ­லில் உரு­ளைக்­கி­ழங்கு மாவுப்பொருள் சேர்ந்­ததே இந்த வெடிப்­புக்­குக் கார­ணம் என மனி­த­வள அமைச்­சின் முதற்­கட்ட விசா­ர­ணை­யில் தெரி­ய­வந்­துள்­ளது. எளி­தில் தீப்­பற்­றக்­கூ­டிய தூசு தீப்­பொ­றி­யு­டன் தொடர்பு ஏற்­பட்­டால் வெடிக்­கும்.

இந்த விபத்­தில் 38 வய­தான திரு மாரி­முத்து, 23 வய­தான திரு ஷோஹெல் முக­மது, 29 வய­தான திரு அனி­ஸு­ஸ­மான் முக­மது ஆகிய மூவ­ரும் உயி­ரி­ழந்­த­னர்.

வெளி­நாட்டு ஊழி­யர் நிலை­யம், கட்­டட கட்­டு­மான மற்­றும் மரத்­துண்டு தொழிற்­சா­லை­கள் ஊழி­யர்­க­ளின் சங்­கம் ஆகி­ய­வற்­றைச் சேர்ந்­த­வர்­கள் மாண்­ட­வர்­க­ளுக்கு நேற்று இறுதி மரி­யா­தை­யைச் செய்­த­னர். நண்­பர்­கள், உற­வி­னர்­கள் என 30 பேர் அந்த நிகழ்­வில் பங்­கேற்­ற­னர்.

இறந்த ஊழி­யர்­க­ளின் நல்­லு­டல்­கள் இந்­தியா, பங்­ளா­தே­ஷில் உள்ள அவர்­க­ளு­டைய சொந்த ஊர்­க­ளுக்கு இன்று அனுப்­பி­வைக்­கப்­படும் என்று தெரி­விக்­கப்­பட்­டது.

சிங்­கப்­பூ­ரில் பணி­பு­ரி­யும் மாரி­முத்­து­வின் இளைய சகோ­த­ரர் திரு மாரி­முத்­து­வின் உடலை சொந்த ஊருக்கு எடுத்­துச் செல்­வார் என்று தெரி­விக்­கப்­பட்­டது.

விபத்­தில் சிக்­கி­ய­வர்­க­ளுக்கு உதவ இட்ஸ்­ரெ­யி­னிங்­ரெ­யின்­கோட்ஸ் அமைப்பு $600,000க்கும் அதி­க­மான நிதி­யைத் திரட்­டி­யி­ருப்­ப­தா­கக் கூறப்­பட்­டது.