சமூகத்தில் இருவர் உட்பட 23 பேருக்கு கொவிட்-19

சமூகத்தில் இருவர் உட்பட 23 பேருக்கு கொவிட்-19

1 mins read

சிங்­கப்­பூ­ரில் நேற்று மேலும் 23 பேருக்கு கொவிட்-19 உறுதி செய்­யப்­பட்­டது. அவர்­களில் இரு­வர் உள்­ளூர் சமூ­கத்­தில் கிரு­மித்­தொற்று உறுதி செய்­யப்­பட்­ட­வர்­கள்.

எஞ்­சிய 21 பேர் வெளி­நா­டு

­க­ளி­லி­ருந்து சிங்­கப்­பூ­ருக்கு வந்த பிறகு இல்­லத்­த­னிமை ஆணை விதிக்­கப்­பட்­ட­வர்­கள் என சுகா­தார அமைச்­சின் அறிக்கை தெரி­வித்­தது.

நேற்று முன்­தி­னம் கிரு­மித்­தொற்று உறுதி செய்­யப்­பட்ட எண்­மர் வெளி­நா­டு­க­ளி­லி­ருந்து இங்கு வந்த பிறகு இல்­லத் தனி­மைப்­

ப­டுத்­தப்­பட்­ட­வர்­கள் என்று சுகா­தார அமைச்­சின் அறிக்கை குறிப்­பிட்­டது. அவர்­களில் ஒரு­வர் மாண­வர் அனு­மதி அட்­டை­யில் இங்கு வந்­த­வர். அறு­வர் வேலை அனு­ம­தி­யில் இங்கு வந்­த­வர்­கள். ஒரு­வர் குறு­கி­ய­கால வருகை அனு­ம­தி­யில் இங்கு வந்­த­வர். 19 பேர் மருத்துவமனைகளிலும் 66 பேர் சமூகப் பராமரிப்பு நிலையங்களிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.