சிங்கப்பூரில் நேற்று மேலும் 23 பேருக்கு கொவிட்-19 உறுதி செய்யப்பட்டது. அவர்களில் இருவர் உள்ளூர் சமூகத்தில் கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள்.
எஞ்சிய 21 பேர் வெளிநாடு
களிலிருந்து சிங்கப்பூருக்கு வந்த பிறகு இல்லத்தனிமை ஆணை விதிக்கப்பட்டவர்கள் என சுகாதார அமைச்சின் அறிக்கை தெரிவித்தது.
நேற்று முன்தினம் கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்ட எண்மர் வெளிநாடுகளிலிருந்து இங்கு வந்த பிறகு இல்லத் தனிமைப்
படுத்தப்பட்டவர்கள் என்று சுகாதார அமைச்சின் அறிக்கை குறிப்பிட்டது. அவர்களில் ஒருவர் மாணவர் அனுமதி அட்டையில் இங்கு வந்தவர். அறுவர் வேலை அனுமதியில் இங்கு வந்தவர்கள். ஒருவர் குறுகியகால வருகை அனுமதியில் இங்கு வந்தவர். 19 பேர் மருத்துவமனைகளிலும் 66 பேர் சமூகப் பராமரிப்பு நிலையங்களிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.