$1.8 மி. மோசடி: பெண்ணுக்கு 4½ ஆண்டு சிறை

$1.8 மி. மோசடி: பெண்ணுக்கு 4½ ஆண்டு சிறை

1 mins read

வங்­கி­களில் மோசடி செய்த 50 வயது பெண்­ணுக்கு நான்­கரை ஆண்­டு­கள் சிறைத் தண்­டனை விதிக்­கப்­பட்­டது. டான் யு ஜியா எனும் அந்­தப் பெண், லஞ்­சம் அளித்த இரண்டு குற்­றச்­சாட்­டு­க­ளை­யும் 51 வயது லீ பெங் யோங் எனும் ஆட­வ­ரு­டன் சேர்ந்து $700,000க்கும் அதி­க­மான தொகையை மோசடி செய்ய சதித்­திட்­டத்­தில் ஈடு­பட்ட 4 குற்­றச்­சாட்­டு­க­ளை­யும் ஒப்­புக்­கொண்­டார். மேலும் 3 லஞ்­சக் குற்­றச்­சாட்­டு­க­ளை­யும் 10 மோச­டிக் குற்­றச்­சாட்­டு­க­ளை­யும் தீர்ப்­பின்­போது நீதி­பதி கணக்­கில் எடுத்­துக்­கொண்­டார்.

இந்த மோச­டிச் சம்­ப­வங்­கள் அனைத்­தும் 2014, 2015 ஆண்­டு­களில் நிகழ்த்­தப்­பட்­டன.

வங்கிகள் இதனால் $1.5 மில்லியன் வரை இழப்பைச் சந்தித்தன.

லீ மற்றும் அவர்கள் நியமித்த இயக்குநர்கள் மீதான வழக்கு பின்னர் விசாரிக்கப்படும்.