வங்கிகளில் மோசடி செய்த 50 வயது பெண்ணுக்கு நான்கரை ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. டான் யு ஜியா எனும் அந்தப் பெண், லஞ்சம் அளித்த இரண்டு குற்றச்சாட்டுகளையும் 51 வயது லீ பெங் யோங் எனும் ஆடவருடன் சேர்ந்து $700,000க்கும் அதிகமான தொகையை மோசடி செய்ய சதித்திட்டத்தில் ஈடுபட்ட 4 குற்றச்சாட்டுகளையும் ஒப்புக்கொண்டார். மேலும் 3 லஞ்சக் குற்றச்சாட்டுகளையும் 10 மோசடிக் குற்றச்சாட்டுகளையும் தீர்ப்பின்போது நீதிபதி கணக்கில் எடுத்துக்கொண்டார்.
இந்த மோசடிச் சம்பவங்கள் அனைத்தும் 2014, 2015 ஆண்டுகளில் நிகழ்த்தப்பட்டன.
வங்கிகள் இதனால் $1.5 மில்லியன் வரை இழப்பைச் சந்தித்தன.
லீ மற்றும் அவர்கள் நியமித்த இயக்குநர்கள் மீதான வழக்கு பின்னர் விசாரிக்கப்படும்.