நாடாளுமன்ற உறுப்பினர் லூயிஸ் இங்கிடம் போலிஸ் விசாரணை

நாடாளுமன்ற உறுப்பினர் லூயிஸ் இங்கிடம் போலிஸ் விசாரணை

1 mins read
f5abebad-a19e-4ead-8be0-0bfa65e5e541
ஈசூன் பார்க் உண­வங்­காடி கடைக் காரர்களுடன் எடுத்த படங்களை நாடாளுமன்ற உறுப்பினர் லூயிஸ் இங் ஃபேஸ்புக்கில் பதிவேற்றினார். படம்: திரு இங்கின் ஃபேஸ்புக் பக்கம் -

போலி­சா­ரி­டம் அனு­மதி பெறா­மல் கடந்த ஆண்டு ஜூன் மாதம் உண­வங்­காடி நிலை­யக் கடைக்­கா­ரர்­க­ளுக்கு ஆத­ர­வான வாச­கம் உள்ள அட்­டையை ஏந்­தி­யது தொடர்­பாக நீ சூன் குழுத் தொகுதி நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் லூயிஸ் இங்­கி­டம் போலிஸ் விசா­ரணை நடத்­தப்­ப­டு­கிறது.

ஈசூன் பார்க் உண­வங்­காடி நிலை­யத்­துக்­குச் சென்ற திரு இங், அங்கு தாம் உண­வுக் கடைக் காரர்­க­ளு­டன் நின்று எடுத்­துக்­கொண்ட படங்­க­ளைத் தமது ஃபேஸ்புக் பக்­கத்­தில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 20ஆம் தேதி­யன்று பதி­வேற்­றம் செய்­தார்.

உணவு அங்­காடி நிலை­யத்­தில் இருந்­த­போது 'இவர்­க­ளுக்கு ஆத­ரவு அளி­யுங்­கள்' என்று அங்­குள்ள கடைக்­கா­ரர்­க­ளுக்கு ஆத­ர­வான வாச­கத்­தைக் கொண்ட அட்­டையை ஏந்தி அவர் பட­மெ­டுத்­துக்­கொண்­டார். உணவு அங்­காடி நிலை­யத்­துக்­குச் செல்ல குடி­யி­ருப்­பா­ளர்­களை ஊக்­கு­விக்­கும் நோக்­கு­டன் தாம் அவ்­வாறு செய்­த­தாக திரு இங் நேற்று தம்­மு­டைய ஃபேஸ்புக் பக்­கத்­தில் பதி­வேற்­றி­யி­ருந்­தார். ஆனால், அனு­மதி பெறா­மல் பொது இடத்­தில் கூட்­டம் கூட்­டிய குற்­றம் நிகழ்ந்­தி­ருக்­க­லாம் என திரு இங்­கி­டம் விசா­ரணை நடத்­தப்­ப­டு­வ­தாக போலி­சார் நேற்று தெரி­வித்­த­னர்.

கடந்த ஆண்டு ஜூன் மாதத்­தில் ஈசூன் பார்க் உண­வங்­காடி நிலை­யத்­தில் வழக்­க­மான சுற்று உலா­வில் ஈடு­பட்­டி­ருந்­த­தாக நேற்று திரு இங் குறிப்­பிட்­டி­ருந்­தார்.

இந்த விவ­கா­ரம் குறித்து போலி­சார் தம்­மி­டம் வாக்­கு­மூ­லம் கேட்­டுள்­ள­தா­க­வும் அவர்­க­ளி­டம் தாம் விளக்­கம் அளித்­துள்­ள­தா­க­வும் திரு இங் தெரி­வித்­துள்­ளார்.

அனு­மதி இல்­லா­மல் பொது இடங்­களில் கூட்­டம் கூட்­டு­வோ­ருக்கு $5,000 வரை அப­ரா­தம் விதிக்­கப்­ப­ட­லாம்.