வேலை நியமனத்தில் பாகுபாடு; விசாரணை

வேலை நியமனத்தின்போது பாரபட்சத்துடன் நடந்துகொண்டு இருக்கலாம் எனக் கூறி, கடந்த மூன்றாண்டுகளில் சராசரியாக ஆண்டிற்கு 400 சம்பவங்களை நியாயமான வேலை நடைமுறைகளுக்கான முத்தரப்புக் கூட்டணி விசாரித்தது என்று மனிதவள அமைச்சு நாடாளுமன்றத்தில் தெரிவித்தது.

ஒவ்வோர் ஆண்டும் கிட்டத்தட்ட 50 சம்பவங்களில் நியாயமான வேலை நடைமுறைக்கான முத்தரப்பு வழிகாட்டுதல்களை நிறுவனங்கள் மீறியது கண்டுபிடிக்கப்பட்டது என்றும் அவற்றின் வேலை அனுமதிச்சீட்டு சிறப்புரிமைகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டன என்றும் மனிதவள துணை அமைச்சர் கான் சியாவ் ஹுவாங் கூறினார்.

அவற்றில் கிட்டத்தட்ட 60% சம்பவங்களில், எந்த நாட்டவர் என்ற அடிப்படையில் பாகுபாடு காட்டப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

மூன்றில் ஒரு பங்கு சம்பவங்களில் பாலினம், வயது அடிப்படையில் பாகுபாடு காட்டப்பட்டது. எஞ்சிய சம்பவங்களில் இனம், திருமண நிலை அல்லது குடும்பப் பொறுப்புகள் போன்றவை தொடர்பில் பாரபட்சம் காட்டப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

“மனிதவள நடைமுறைகளைப் பின்பற்றுவதில் குறைபாட்டுடன் நடந்துகொண்டு, அதன் காரணமாக ஆட்சேர்ப்பு நடைமுறையில் தவறான தகவலும் பாகுபாடும் இடம்பெற்றது போன்ற கடுமை குறைவான சம்பவங்களில் நிறுவனங்களுக்கு அமைச்சு எச்சரிக்கை விடுத்தது. இத்தகைய சம்பவங்களில், குறைபாடுகளைக் களையும்படி முத்தரப்புக் கூட்டணி நிறுவனங்களுக்கு ஆலோசனை வழங்கும்,” என்று திருவாட்டி கான் கூறினார்.

சராசரியாக ஓராண்டிற்கு 40 எச்சரிக்கைகளை அமைச்சு விடுத்திருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!