கொவிட்-19 சூழல் காரணமாக உயரும் காப்புறுதிக் கட்டணங்கள்

சிங்கப்பூரில் கொவிட்-19 கொள்ளைநோய் சூழல் காரணமாக பல்வேறு வர்த்தகப் பிரிவுகளிலும் காப்புறுதிக் கட்டணம் அதிகரித்து வருவதாக அனைத்துலக அளவிலான அபாயம், ஓய்வு மற்றும் சுகாதாரத் தீர்வுகள் வழங்கும் அயோன் நிறுவனம் கூறியது,

இழப்புகள் ஏற்படுவதைக் குறைக்கும் விதத்தில் காப்புறுதி நிறுவனங்களுக்கும் தங்களது வாடிக்கையாளர்களும் செயல்படும் திட்டங்களைப் புதுப்பிப்பது உட்பட புதிய நடவடிக்கைகளையும் எடுத்து வருகின்றன.

அதிகரித்து வரும் காப்புறுதிக் கட்டணங்களைச் சரிக்கட்டும் விதத்தில் கழிவுத் தொகையை அதிகரிப்பது உட்பட பல்வேறு மாற்று வழிமுறைகளை நடைமுறைப்படுத்துகின்றன வர்த்தகங்கள்.

கொவிட்-19 தொடர்பான தாக்கம் வர்த்தகங்கள் மற்றும் காப்புறுதி நிறுவனங்களால் இன்னும் முழுமையாக உணரப்படவில்லை என்று குறிப்பிட்ட அயோன் நிறுவனத்தின் ஆசியாவுக்கான வர்த்தக அபாயத் தீர்வுகளின் தலைமை தரகு அலுவலர் பிரென்ட் கிளாசன் குறிப்பிட்டுள்ளார்.

இந்த ஆண்டில் அதன் தாக்கம் உணரப்படும் என்றாலும் தடுப்பூசி போடப்படுவதால் நிலைமை சீரடையும் என எதிர்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!