ஆர்ச்சர்ட் டவர்ஸ் கொலை வழக்கில் 6வது நபருக்கு 57 மாதம் சிறை, பிரம்படி

ஆர்ச்சர்ட் டவர்ஸ் கொலை வழக்கில் 6வது நபருக்கு 57 மாதம் சிறை, பிரம்படி

1 mins read
d93ce2b3-aa90-48e1-aef0-30676b94a515
ஆர்ச்சர்ட் டவர்ஸ் கொலை வழக்கில் மொத்தம் ஏழு பேர் கொலைக் குற்றச்சாட்டை எதிர்நோக்கினர். இவர்களில் டான் சென் யாங் என்பவர் மட்டுமே கொலைக் குற்றச்சாட்டை எதிர்நோக்குகிறார். இதர ஆறு பேர் மீதான கொலைக் குற்றச்சாட்டு குறைக்கப்பட்டுள்ளது. கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

ஆர்ச்­சர்ட் டவர்ஸ் கொலை வழக்­கில் ஆரம்­பத்­தில் கொலைக் குற்­றம் சுமத்­தப்­பட்டு பின்­னர் குறைக்­கப்­பட்ட 6வது நப­ருக்கு நேற்று முன்தினம் நான்கு ஆண்­டு­கள், ஒன்­பது மாதம் சிறைத் தண்­ட­னை­யும் 12 பிரம்­ப­டி­களும் விதிக்­கப்­பட்­டன.

டான் ஹோங் ஷெங், 24, மீதான குற்­றச்­சாட்டு, ஆயு­தங்­களை வைத்­தி­ருந்­த­வ­ரு­டன் இருந்­த­தாக குறைக்­கப்­பட்­டுள்­ளது.

கடந்த 2019 ஜூலை 2ஆம் தேதி நடந்த கொலைச் சம்­ப­வத்­தில் தண்­டிக்­கப்­பட்­டுள்ள 6வது நபர் இவர்.

ஆர்ச்­சர்ட் டவர்­ஸில் 31 வயது சத்­தீஷ் நோயல் கோபி­தாஸ் தாக்­கப்­பட்­ட­போது கூர்­மை­யான வளைவு கொண்ட கத்­தியை வைத்­தி­ருந்த தற்­போது 29 வய­தா­கும் டான் சென் யாங்­கு­டன் இருந்­ததை டான் ஹோங் ஷெங் ஒப்­புக்கொண்­டார். இந்த வழக்­கில் தொடர்­பில்­லாத இரு வேறு கல­வ­ரத்­தில் ஈடு­பட்ட குற்­றச்­சாட்­டு­க­ளை­யும் அவர் கடந்த மாதம் நீதி­மன்­றத்­தில் ஒப்­புக் கொண்­டார். ஆரம்­பத்­தில் சத்­தீஷை கொலை செய்­த­தாக ஏழு பேர் மீது குற்­றம் சாட்­டப்­பட்­டி­ருந்­தது.

அவர்­களில் ஒரு­வர் டான் ஹோங் ஷெங். இந்த வழக்­கில் டான் சென் யாங் என்­ப­வர் மட்­டும் தற்போது கொலைக் குற்­றச்­சாட்டை எதிர்­நோக்­கு­கி­றார்.

இதர ஆறு பேர் மீதான குற்­றச் ­சாட்டு குறைக்­கப்­பட்டு தீவி­ர­மில்­லாத தாக்­கு­தல் போன்ற குற்­றச்­சாட்­டு­கள் சுமத்­தப்­பட்­டன.

டான் ஹோங் ஷெங்­கின் வழக்­க­றி­ஞர்­க­ளான இன்­விக்­டஸ் சட்ட நிறு­வ­னத்­தைச் சேர்ந்த திரு ஜோஸ்­பஸ் டானும் திரு கோரி வோங்­கும் சத்­தீஷ் தாக்­கப்­பட்­ட­போது அதில் தமது கட்­சிக்­கா­ரர் பங்­கேற்­க­வில்லை என்­றும் தடுக்­கவே முயற்சி செய்­தார் என்­றும் நீதி­மன்ற விசா­ர­ணை­யில் கூறி­யி­ருந்­த­னர்.