2020ல் கொடையாளர்கள் குறைவு என்றாலும் சாதனை அளவில் ரத்த நன்கொடை

2 mins read
d6b67952-6df6-47db-b3d2-c92e7ab03c08
-

சிங்­கப்­பூ­ரில் ஐந்­தாண்­டு­களில் இல்­லாத அள­வுக்கு ஆக அதி­க­மாக 117,000க்கும் அதிக அலகு (யூனிட்) ரத்­தம் 2020ல் நன்­கொடை மூலம் சேக­ரிக்­கப்­பட்­டது.என்­றா­லும் சென்ற ஆண்­டில் ரத்த நன்­கொடை செய்­த­வர்­க­ளின் மொத்த எண்­ணிக்கை குறை­வாக இருந்­தது என்று சிங்­கப்­பூர் செஞ்­சி­லு­வைச் சங்­கம் தெரி­விக்­கிறது.

கடந்த 2017ல் ஏறக்­கு­றைய 116,000 அலகு ரத்­தம் நன்­கொடை செய்­யப்­பட்­டது. அது, இங்கு 32,000 பேருக்­கும் அதிக நோயா­ளி­க­ளுக்கு நன்மை பயத்­தது. சென்ற ஆண்டு ரத்த நன்­கொடை அதி­க­மாக இருந்­தது ஏன் என்­பதை விளக்­கிய இந்­தச் சங்­கம், பல முறை ரத்த நன்­கொடை செய்­த­வர்­க­ளின் விகி­தாச்­சா­ரம் அதி­க­மாக இருந்­ததே அதற்­கான கார­ண­மாக இருக்­கக்­கூ­டும் என்று குறிப்­பிட்­டது.

ஒரு முறைக்கு மேலும் ரத்த நன்­கொடை வழங்­கி­ய­வர்­க­ளின் அளவு 2019ல் 37 விழுக்­கா­டாக இருந்­தது. இது 2020ல் 42 விழுக்­கா­டா­கக் கூடி­யது. 2016க்குப் பிறகு இந்த அளவே ஆக அதி­கம். ரத்த நன்­கொ­டை­யா­ளர்­கள் மூன்று மாதத்­துக்கு ஒரு முறை என்ற கணக்­கில் ஓராண்­டுக்கு நான்கு முறை ரத்த நன்­கொடை செய்­ய­லாம். சென்ற ஆண்­டில் முதன்­மு­த­லாக ரத்­தம் வழங்­கி­ய­வர்­க­ளின் எண்­ணிக்­கை­யும் 28 விழுக்­கா­டா­கக் கூடி­யது. இது 2019ல் 23 விழுக்­கா­டாக இருந்­தது.

கொவிட்-19 கார­ண­மாக சென்ற ஆண்­டில் பொரு­ளி­யல் முடக்­கம் தொடங்­கி­ய­போது ரத்த நன்­கொடை குறை­வாக இருந்­தது. இருந்­தா­லும், அன்­றாட ரத்த நன்­கொடை குறை­வாக இருப்­பது பற்றி ஊட­கங்­களில் தக­வல்­கள் வெளி­யா­னதும் இந்­தச் சங்­கம் இடை­வி­டா­மல் ரத்த நன்­கொ­டை­யா­ளர்­க­ளுக்கு கோரிக்கை விடுத்­ததும் அதி­க­மான நன்­கொ­டை­யா­ளர்­கள் ரத்­தம் அளிக்க முன்­வந்­த­தற்கான கார­ணங்களாக இருந்தன.

நன்­கொ­டை­யா­ளர்­கள் வெகு வேக­மாகச் செயல்­பட்­டார்­கள். இது மிக­வும் மகிழ்ச்சி அளிப்­ப­தாக இருக்­கிறது என்று செஞ்­சி­லு­வைச் சங்­கத்­தின் தலை­மைச் செயலாளரும் தலைமை நிர்­வா­கி­யு­மான பெஞ்­ச­மின் வில்­லி­யம் கூறு­கி­றார். சென்ற ஆண்­டில் தேவைப்­பட்ட அள­விற்கு ரத்­தத்தை நன்­கொ­டை­யாக இந்­தச் சங்­கம் பெற முடிந்­தது. இருந்­தா­லும் நாட்­டிற்­குப் பாது­காப்­பான ரத்­தம் போதிய அளவு கிடைப்­பதை உறு­திப்­ப­டுத்த மேலும் பல­வற்­றைச் செய்ய வேண்டி இருக் கிறது என்­றார் திரு வில்­லி­யம்.

ஒரு­வர் ஒரு நேரத்­தில் ஓர் அலகு ரத்­தத்தை நன்­கொ­டை­யாக வழங்­கு­கி­றார். அன்­றா­டம் 400 அலகு­கள் ரத்­தம் தேவைப்­ப­டு­கிறது. அதோடு மட்­டு­மின்றி நன்­கொடை பெறப்­படும் ரத்­தத்­தின் ஆயு­ளும் குறைவு. அதி­லி­ருக்­கும் சிவப்பு அணுக்­கள் ஆறு வார காலம்­தான் உயிர்ப்புடன் இருக்­கும். ரத்­தத் தட்­டு­கள் ஐந்து வார காலமே உயி­ர்ப்புடன் இருக்­கும். ஆகை­யால் நிலை­யாக ரத்த நன்­கொ­டைக்­குத் தேவை இருப்­ப­தாக அவர் கூறினார்.

சிங்­கப்­பூர் மக்­களில் ஏறத்­தாழ 1.8 விழுக்­காட்­டி­னர் மட்­டுமே ரத்த நன்­கொ­டை­யா­ளர்­க­ளாக இருக்­கிறார்­கள். அவர்­களில் ஐந்­தில் ஏறக்­கு­றைய இரண்டு பங்­கி­னர் ஆண்­டுக்கு இரண்டு முறைக்கு மேலும் ரத்­தம் கொடுக்­கி­றார்­கள். ரத்த நன்­கொடை என்­பது பொது­மக்­க­ளின் தேசிய பொறுப்­பாக அங்­கீ­க­ரிக்­கப்­பட வேண்­டும் என்று திரு வில்­லி­யம் கருத்து தெரி­வித்­தார்.