ஃபைசர்-பயோஎன்டெக் முதல் தடுப்பூசியைப் போட்டுக்கொண்ட 12 நாள்களில் இருந்து, கொவிட்-19 தொற்றுக்கு எதிரான குறிப்பிட்ட வகை நோயெதிர்ப்புப் பொருள்களும் செல்களும் உடலில் உருவாக அத்தடுப்பூசி உதவும் என்பதை சிங்கப்பூர் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
95% செயல்திறன் கொண்ட அத்தடுப்பூசியை மூன்று வார இடைவெளியில் இரு முறை போட்டுக்கொள்ள வேண்டும்.
முன்னதாகவே உருவாகும் நோயெதிர்ப்புப் பொருள்களாலும் 'டி-செல்கள்' எனும் குறிப்பிட்ட வகை நோயெதிர்ப்பு செல்களாலும் இந்தப் பாதுகாப்பு கிடைக்கிறது என்று சிங்கப்பூர் பொது மருத்துவமனை மற்றும் டியூக்-என்யுஎஸ் மருத்துவப் பள்ளியைச்ச் சேர்ந்த ஆய்வாளர்கள் குழு கண்டுபிடித்து இருக்கிறது.