'தந்தை, மகனைத் தாக்கிய ஆடவருக்கு மனநலப் பிரச்சினை இருந்தது'

'தந்தை, மகனைத் தாக்கிய ஆடவருக்கு மனநலப் பிரச்சினை இருந்தது'

1 mins read

பெண்­ட­மி­யர் சாலை­யில் உள்ள காப்­பிக்­கடை அருகே கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தந்தை, மகன் ஆகிய இரு­வ­ரைத் தாக்­கிய 73 வயது கியோ கிம் ஹோக்­கிற்கு மன­ந­லப் பிரச்­சினை இருந்­த­தாக நீதி­மன்­றத்­தில் நேற்று தெரி­விக்­கப்­பட்­டது.

கியோ முன்­ன­தாக புரிந்த குற்­றங்­க­ளுக்­காக கட்­டாய மனநல சிகிச்சை உத்­த­ரவை அவர் நிறை­வேற்­றிக்­கொண்டு இருந்­த­போது அவர் அந்த இரு­வ­ரை­யும் தாக்­கி­னார். கியோ­வின் மன­ந­லப் பிரச்­சினை, அவ­ரது முந்­தைய குற்­றங்­கள் குறித்த மேல்­வி­வ­ரங்­கள் நேற்று நீதி­மன்­றத்­தில் வெளி­யி­டப்­ப­ட­வில்லை.

கியோ நடத்­திய தாக்­கு­த­லில் காப்­பிக்­கடை நடத்­து­ந­ரான 'ஜிஎச்கே ஹோல்­டிங்ஸ்' நிறு­வ­னத்­தின் தலை­வர் திரு கோ ஹுங் குவாங், 69, என்­ப­வ­ரின் இடது கையில் கீறல்­கள் விழுந்­தன.

அந்த நிறு­வ­னத்­தில் மேலா­ள­ராக உள்ள திரு கோவின் மகன் திரு ரேமண்ட் கோ மெங் சுவான், 31, என்­ப­வ­ருக்­கும் நெஞ்­சுப்­ப­குதி உள்­ளிட்ட உட­லின் பல பகு­தி­களில் வெட்­டுக்­கா­யங்­கள் ஏற்­பட்­டன. குற்­றம் புரிந்த கியோ­வுக்­கும் அவ­ரால் தாக்­கப்­பட்ட தந்தை, மக­னுக்­கும் இடை­யி­லான உற­வு­முறை பற்றி நீதி­மன்ற ஆவ­ணங்­களில் குறிப்­பி­டப்­ப­ட­வில்லை.

கியோ­வுக்கு மேலும் ஒரு கட்­டாய மனநல சிகிச்சை உத்­த­ரவை நிறை­வேற்­று­வ­தற்­கான சாத்தியத்தை ஆராய மாவட்ட நீதி­பதி உத்­த­ர­விட்­டார்.