சைனாடவுன் பாயிண்ட் கடைத்தொகுதியில் உள்ள கடை ஒன்றில் இன்று காலை தீ விபத்து ஏற்பட்டதால் அங்கிருந்து ஏறக்குறைய 100 பேர் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.
கடைத்தொகுதியின் முதல் தளத்தில் உள்ள 'லக்ஷரி சிட்டி' கடையில் இன்று காலை 10.15 மணியளவில் தீ மூண்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தக் கடைக்கு அருகே மக்கள் செல்லாமல் இருக்க தடுப்புவேலிகள் அமைக்கப்பட்டன.
அதைத் தொடர்ந்து அங்கிருந்தவர்கள் கடைத்தொகுதியைவிட்டு வெளியேற பாதுகாப்பு அதிகாரிகள் உதவினர். அதேவேளையில் வேறு எவரும் கடைத்தொகுதிக்குள் நுழையாமலும் அதிகாரிகள் பார்த்துக்கொண்டனர்.

