முகக்கவசம் அணிய மறுத்த ஆடவர் மீது குற்றச்சாட்டு

மலேசியாவின் எதிர்க்கட்சியான கெஅடிலான் கட்சியின் துணைத் தலைவர் பதவியிலிருந்து சேவியர் ஜெயகுமார் இன்று விலகினார்.

இவருடன் சேர்த்து கடந்த மூன்று வாரங்களில் மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் அக்கட்சியிலிருந்து விலகியுள்ளனர்.

கெஅடிலானிலிருந்து விலகிய திரு சேவியர், சுயேச்சை நாடாளுமன்ற உறுப்பினர் என்கிற முறையில் மலேசியப் பிரதமர் முகைதீன் யாசினுக்கும் அவரது பெரிக்காத்தான் நேஷன் கூட்டணிக்கும் தமது ஆதரவைத் தெரிவித்துள்ளார்.

திரு சேவியர் 1998ஆம் ஆண்டிலிருந்து கெஅடிலான் கட்சியில் இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த ஓராண்டு நிகழ்பவை தமக்கு விரக்தியை ஏற்படுத்தியிருப்பதாக அவர் கூறினார்.

கொவிட்-19 நெருக்கடிநிலையின்போது கெஅடிலான் கட்சித் தலைமை பொதுத் தேர்தலுக்கு அழைப்பு விடுத்திருந்தது. இதுகுறித்து திரு சேவியர் அதிருப்தி தெரிவித்தார்.

“கொவிட்-19 நெருக்கடிநிலையின்போது கிருமிப் பரவலைத் தடுக்கவும் வேலை வாய்ப்புகளை உருவாக்கவும் பொருளியலை மீண்டும் உயிர்ப்பிக்க தேவையான நிதிகளைப் பெறவும் அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்க வேண்டும் இதற்கே முன்னுரிமை தர வேண்டும்,” என்றார் திரு சேவியர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!