முன்னாள் பெண் கைதிகளும் அவர்களின் பிள்ளைகளுமாக 28 பேர் நேற்று இஸ்தானாவுக்குச் சென்று அதிபர் ஹலிமா யாக்கோப்புடன் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டனர்.
‘சுவர்களுக்கு அப்பால் அன்பு’ என்ற ஒரு புத்தகம் அந்த நிகழ்ச்சியில் வெளியிடப்பட்டது. அந்தப் புத்தகம் முன்னாள் கைதிகளான பத்து பெண்களால் எழுதப்பட்டது.
சிங்கப்பூரில் கொவிட்-19 தலைகாட்டியது முதல் ஓராண்டுக் காலத்தில் இடம்பெற்ற முதல் இஸ்தானா தோட்ட சுற்றுலா இதுவே ஆகும். அந்தப் புத்தகத்தை giving.sg என்ற முகவரியில் அஞ்சல் செலவு உட்பட $40க்கு வாங்கலாம். விற்பனை மூலம் கிடைக்கும் தொகை ‘நியூ லைஃப் ஸ்டோரிஸ்’ என்ற அறப்பணி அமைப்புக்குச் செல்லும்.
நிகழ்ச்சிக்குப் பிறகு செய்தி யாளர்களிடம் பேசிய அதிபர், முன்னாள் கைதிகளான இத்தகைய தாய்மார்களுக்கும் அவர்களின் பிள்ளைகளுக்கும் தொடர்ந்து சமூகத்தின் ஆதரவு கிடைக்க வேண்டும் என்று வலியுறுத்திக் கூறினார்.