'உலகமயம் காரணமாக இங்கு ஒவ்வொருவருக்கும் நன்மை'

'உலகமயம் காரணமாக இங்கு ஒவ்வொருவருக்கும் நன்மை'

2 mins read
971048cc-6a6b-468a-a7b1-41e8e1d33456
பிரதமர் லீ சியன் லூங் பிபிசி நிறுவனத்திற்குப் பேட்டியளித்தார். படம்: தொடர்பு, தகவல் அமைச்சு -

உல­க­மய ஏற்பாட்டு முறைக்கு நெருக்­கு­தல் ஏற்­பட்டு இருக்­கிறது. இருந்­தா­லும் அதற்கு ஆத­ரவும் தேவையும் இன்­னும் வலு­வாக இருக்­கின்றன. நாடு­கள் ஒத்­துழைக்க வேண்­டிய தேவை இல்லாமல் போய்விடவில்லை என்று பிர­த­மர் லீ சியன் லூங் தெரி­வித்து இருக்­கி­றார்.

சிங்­கப்­பூ­ரில் உல­க­ம­யம் ஒவ்­வொ­ரு­வ­ருக்­கும் நன்மை அளித்து இருக்­கிறது என்றும் பிபி­சிக்கு அளித்த பேட்­டி­யில் அவர் கூறினார்.

"பன்­னாட்டு நிறு­வ­னங்­கள் சிங்­கப்­பூ­ரில் செயல்­ப­ட­வில்லை என்­றால், அல்­லது அனைத்­து­லக வர்த்­த­கம் இடம்­பெ­ற­வில்லை என்­றால், திறந்த பொரு­ளி­யலை சிங்­கப்­பூர் கொண்­டி­ருக்­க­வில்லை என்­றால் நம் அனை­வ­ருக்­குமே பாதிப்பு ஏற்­பட்­டி­ருக்­கும் என்­ப­தில் ஐய­மில்லை," என்று திரு லீ தெரி­வித்­தார்.

பாது­காப்பு, போட்­டித்­தி­றன், தொழில்­நுட்­பக் கட்­டுப்­பாடு ஆகியவை தொடர்­பில் நாடு­க­ளுக்கு இடை­யில் பதற்­றம் இருக்­கும் என்­பதை ஒப்­புக்­கொண்ட திரு லீ, இருந்­தா­லும் ஒன்று மற்­றொன்­று­டன் சேர்ந்து செயல்­பட வேண்­டிய அவ­சி­யத்தைத் தவிர்த்­து­விட இய­லாது என்­றார்.

கொவிட்-19 தடுப்­பூ­சியை எடுத்­துக்­காட்­டாக அவர் குறிப்­பிட்­டார்.

ஒவ்­வொரு நாடும் சொந்­த­மாக அதைத் தயா­ரித்­து­விட முடி­யாது என்று கூறிய அவர், தடுப்­பூ­சியை உரு­வாக்­கக்­கூ­டிய நாடு­கள், ஒன்று மற்­றொன்­று­டன் ஒத்­து­ழைக்க வேண்­டிய தேவை இருப்­ப­தைச் சுட்­டி­னார்.

உல­க­ம­யத்­திற்கு நெருக்­கடி ஏற்­பட்டு இருந்­தா­லும் நாடு­களும் நிறு­வ­னங்­களும் எல்லை கடந்து ஒத்­து­ழைக்க வேண்­டிய தேவை மறைந்­து­வி­டாது என்­பதே தனது எண்­ணம் என்­றார் அவர்.

உல­க­ம­யம் கார­ண­மாக கை விடப்­பட்­ட­தாக மக்­களில் பல­ரும் கருதும் சூழ­லில் சிங்­கப்­பூ­ருக்கு புதிய பொரு­ளி­யல் முன்­மா­திரி தேவையா என்று பிபிசி பேட்­டி­யாளர் கரிஷ்மா வஸ்­வானி கேட்­ட­தற்­குப் பதி­ல­ளித்த பிர­த­மர், உல­க­ம­யம் சிங்­கப்­பூ­ரில் ஒவ்­வொ­ரு­வ­ருக்­கும் நன்­மை அளித்து இருப்­ப­தா­கத் தெரி­வித்­தார்.