தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

'உள்துறை அதிகாரிகளுக்கு இணையம் வழியாக பயிற்றுவிப்பு தொடரும்'

1 mins read
12cf8a2c-bfc3-48f5-858f-be3e89cc6d05
பயிற்சியில் ஈடுபட்டுள்ள சிங்கப்பூர் சிறைச்சாலை சேவை அதிகாரிகள். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

கொள்­ளை­நோய்ச் சூழ­லால் நேரடி பயிற்சி வகுப்­பு­கள் ரத்து செய்­யப்­பட்­டுள்­ளன. இந்­நி­லை­யில் தங்­க­ளின் பணிக்­குத் தேவைப்­படும் பயிற்­சி­க­ளைத் தொடர்ந்து அதி­கா­ரி­கள் மேற்­கொள்ள, உள்­து­றைக் குழு பயிற்­சிக் கழ­கத்­தைச் சேர்ந்த பயிற்று­விப்­பா­ளர்­கள் தங்­க­ளின் திட்­டங்­களை மாற்றி அமைக்க வேண்­டிய நிலை ஏற்­பட்­டது.

மத்­திய போதைப்­பொ­ருள் ஒழிப்­புப் பிரிவு (சிஎன்பி), சிங்­கப்­பூர் போலிஸ் படை (எஸ்­பி­எஃப்), சிங்­கப்­பூர் சிறைச்­சாலை சேவை (எஸ்ப்­பி­எஸ்) போன்ற வெவ்­வேறு அமைப்­பு­க­ளைச் சேர்ந்த உள்­துறை அதி­கா­ரி­கள், தங்­க­ளின் பயிற்­சி­கள் தடை­யின்றி நடப்­பதை உறு­தி­செய்ய 'ஸூம்', மின்­னி­லக்க நாட்­கு­றிப்­புக்­கு­ரிய கைபேசி செய­லி­கள், காணொளி வழி தொலை­பேசி அழைப்­பு­கள் எனப் பல­த­ரப்­பட்ட உத்­தி­க­ளைக் கையாண்டு வரு­கின்­ற­னர்.

2019ஆம் ஆண்­டின் போதைப்­பொ­ருள்­க­ளின் தவ­றான பயன்­பாட்­டுக்­கான திருத்­தச் சட்­டத்தை அடுத்து இது தொடர்­பில் பயிற்சி அளிப்­பது அவ­சி­ய­மானது. இத்­தி­ருத்­தச் சட்­டத்­தின்­படி போதை­யர் மறு­வாழ்வு நிலை­யம் அல்­லது சிறை­யி­லி­ருந்து விடு­தலை­யா­கும் போதைப்­பு­ழங்­கி­களைக் கண்­கா­ணிக்­கும் கால­கட்­டம் ஈராண்­டி­லி­ருந்து ஐந்­தாண்­டுக்கு நீட்­டிக்­கப்­பட்­டது.

போதைப்­பொ­ருள் தொடர்­பில் கண்­கா­ணிக்­கப்­படும் நபர்­க­ளின் தேவை­களை அடை­யா­ளம் காண்­பது, அந்­தந்த சமூ­கச் சேவை அமைப்­பு­க­ளுக்கு அவர்­களை அனுப்­பு­வது போன்­றவை தொடர்­பில் சிஎன்பி அதி­கா­ரி­க­ளுக்­குச் சமூ­கக் கண்­கா­ணிப்­புத் திறன்­களை வளர்க்­கும் பயிற்சி வகுப்பு தேவைப்­பட்­ட­தா­கக் கூறப்­பட்­டது. இதற்­காக காணொளி வழி தொலை­பேசி அழைப்­பு­கள் செய்­யப்­பட்­டன.

இரண்டு மாதங்­களில் உள்­துறைக் குழு பயிற்­சிக் கழ­கம் நடத்­திய மெய்­நி­கர் வகுப்­பு­க­ளுக்கு மொத்­த­ம் உள்ள 1,500 பயிற்­று­விப்­பா­ளர்­களும் சென்­ற­னர்.