தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

'சில்லி அப்பி' நச்சுணவு சம்பவம்: தெமாசெக் தொடக்கக் கல்லூரியைச் சேர்ந்த எண்மர் மருத்துவமனையில்

2 mins read

இதுவரை 82 பேருக்கு உடல்நலக் குறைவு; 14 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை

'சில்லி அப்பி கேட்­ட­ரிங்' என்ற உண­வுச் சேவை வழங்­கும் நிறு­வனம் தயா­ரித்த உண­வைக் கடந்த வெள்­ளிக்­கி­ழமை உண்ட பிறகு இரைப்பை பிரச்­சி­னை­யால் அவ­தி­யுற்ற தெமா­செக் தொடக்­கக் கல்­லூரி பணி­யா­ளர்­கள் எண்­மர் மருத்­து­வ­ம­னை­யில் அனு­ம­திக்­கப்­பட்டுள்­ள­னர்.

அவர்­க­ளது உடல்­நிலை தற்­போது சீராக இருப்­ப­தாக தெமா­செக் தொடக்­கக் கல்­லூரி முதல்­வர் லோ ஆய் நார் தெரி­வித்­தார். 'சில்லி அப்பி' நிறு­வ­னம் தயா­ரித்த பகல் உண­வைச் சாப்­பிட்ட பின்­னர் மொத்­தம் 43 தொடக்­கக் கல்­லூரி பணி­யா­ளர்­க­ளுக்கு இரைப்பை பிரச்­சினை ஏற்­பட்­ட­தாகக் கூறி­னார்.

"இது­கு­றித்­துக் கல்­லூ­ரிக்­குத் தக­வல் கிடைத்­த­வு­டன், உண­வுச் சேவை நிறு­வ­னம் தயா­ரித்த அதே உணவை உண்ட பின்­னர் இரைப்பை பிரச்­சினை ஏற்­பட்­டால் மருத்­து­வரிடம் செல்­லு­மாறு அனைத்­துப் பணி­யா­ளர்­க­ளுக்­கும் கல்­லூரி அறி­வு­றுத்­தி­யது," என்­றார் திரு­மதி லோ. இரைப்பை பிரச்­சி­னைக்­கான அறி­கு­றி­களில் வயிற்­றுப்­போக்­கும் வாந்­தி­யும் அடங்­கும்.

இந்­தச் சம்­ப­வத்­தில் பாதிக்­கப்­பட்­டுள்ள அனைத்­துப் பணி­யா­ளர்­களின் உடல்­ந­ல­னை­யும் தெமா­செக் தொடக்­கக் கல்­லூரி அணுக்­க­மாகக் கண்­கா­ணித்து வரு­வ­தா­க­வும் அவர்­க­ளுக்­குத் தொடர்ந்து ஆத­ரவை அது நீட்­டிப்­ப­தா­க­வும் திரு­மதி லோ மேலும் சொன்­னார்.

இதன் தொடர்­பான விசா­ர­ணை­யில் சுகா­தார அமைச்­சு­ட­னும் சிங்­கப்­பூர் உணவு அமைப்­பு­ட­னும் அக்­கல்­லூரி பணி­யாற்றி வரு­கிறது. இந்த நச்­சு­ண­வுச் சம்­ப­வத்­தைத் தொடர்ந்து எண் 3015 பிடோக் நார்த் ஸ்தி­ரீட் 5ல் அமைந்­துள்ள 'சில்லி அப்பி' நிறு­வ­னம் அதன் செயல்­பா­டு­க­ளைத் தற்­கா­லி­க­மாக நிறுத்தி வைக்க உத்­த­ர­வி­டப்­பட்டுள்ளது.

கடந்த புதன்­கி­ழ­மைக்­கும் வெள்­ளிக்­கி­ழ­மைக்­கும் இடையே அந்த நிறு­வ­னம் தயா­ரித்த உணவை உட்­கொண்ட பின்­னர் இரைப்பை பிரச்­சி­னை­யால் அவ­தி­யுற்ற 82 பேரில் மேற்­கூ­றப்­பட்ட தெமா­செக் தொடக்­கக் கல்­லூரி பணி­யா­ளர்­களும் அடங்­கு­வர் என நம்­பப்­ப­டு­கிறது.

அந்த 82 பேரில் 14 பேர் மருத்­து­வ­ம­னை­யில் அனு­ம­திக்­கப்­பட்டு சிகிச்சை பெற்று வரு­வ­தா­க­வும் அவர்­க­ளது உடல்­நிலை தற்­போது சீராக இருப்­ப­தா­க­வும் சுகா­தார அமைச்­சும் சிங்­கப்­பூர் உணவு அமைப்­பும் நேற்று முன்­தி­னம் வெளி­யிட்ட அறிக்­கை­யில் தெரி­வித்­தன.

2019ல் 'சி' குறி­யீடு வழங்­கப்­பட்­டது

'சில்லி அப்பி கேட்­ட­ரிங்' தயா­ரித்த உண­வைச் சாப்­பிட்ட 24 பேர் இதே­போல் இரைப்பை பிரச்­சி­னை­யால் பாதிக்­கப்­பட்­ட­னர். 2019ஆம் ஆண்டு டிசம்­பர் 18ஆம் தேதி­யன்று நடந்த இச்­சம்­ப­வத்­தைத் தொடர்ந்து சிங்­கப்­பூர் உணவு அமைப்பு, 'சில்லி அப்பி கேட்­ட­ரிங்' நிறு­வ­னத்­தின் சுகா­தா­ரக் குறி­யீட்டை 'ஏ'யிலி­ருந்து 'சி'க்கு இறக்­கி­யது.