பெருங்குடல் புற்றுநோய் சோதனை செய்துகொள்ள பலர் தயக்கம்

பெருங்குடல் புற்றுநோய் சோதனை செய்துகொள்ள பலர் தயக்கம்

2 mins read

சிங்­கப்­பூ­ரர்­க­ளி­டையே அதி­கம் ஏற்­படும் புற்­று­நோய்­களில் பெருங்­கு­டல் புற்­று­நோய் ஒன்று. ஆனால் அதை ஆரம்­பக் கட்­டத்­தி­லேயே கண்­ட­றி­வ­தற்­குத் தேவை­யான பரி­சோ­த­னை­க­ளைப் பலர் செய்­து­கொள்­வ­தில்லை என ஆய்வு ஒன்று தெரி­வித்­துள்­ளது.

பரி­சோ­த­னை­யைச் செய்­து­கொள்­ளும் 100,000 பேரில் கிட்­டத்­தட்ட ஏழு விழுக்­காட்­டி­ன­ருக்­குப் பெருங்­கு­டல் புற்­று­நோய் உண்­டா­கும் சாத்­தி­யம் கண்­ட­றி­யப்­படு­வ­தாக தேசிய பல்­க­லைக்­க­ழக மருத்­து­வ­ம­னை­யைச் சேர்ந்த இணைப் பேரா­சி­ரி­யர் டான் கெர் கான் கூறி­னார்.

பெருங்­கு­டல் புற்­று­நோ­யால் ஓர் ஆண்­டில் 2,000க்கும் மேற்­பட்ட நபர்­கள் பாதிக்­கப்­ப­டு­வ­தாக அண்­மைய ஆண்டு புள்­ளி­வி­வ­ரங்­கள் கூறு­கின்­றன.

"அடிக்­கடி பரி­சோ­த­னை­கள் செய்­து­கொண்­டால் பெருங்­கு­டல் புற்­று­நோயை ஆரம்­பக் கட்­டத்­திலேயே கண்­ட­றிந்­து­வி­ட­லாம். அந்­தக் கட்­டத்­தில்­தான் எளி­தில் சிகிச்சை அளித்­துக் குணப்­ப­டுத்த முடி­யும்," என்­றார் பேரா­சி­ரி­யர் டான்.

'ஃபிட்' எனும் பரி­சோ­தனை முறைப்­படி, மலத்­தின் இரு மாதிரி­கள் தேவைப்­படும். ஒரே வாரத்­தில் இரு வேறு தினங்­களில் இந்த இரண்டு மாதி­ரி­களும் சேக­ரிக்­கப்­பட வேண்­டும். அவற்­றில் சிறி­தளவு ரத்­தம் இருந்­தால் 'கொலொ­னோஸ்­கோப்பி' பரி­சோ­தனை செய்­து­கொள்ள அரு­கி­லுள்ள பொது மருத்­து­வ­ம­னைக்கு அனுப்­பப்­ப­டு­வர்.

இந்­தப் பரி­சோ­த­னைக்­கான கரு­வி­கள் சிங்­கப்­பூர் புற்­று­நோய் சங்­கத்­தால் விநி­யோ­கம் செய்­யப்­படும். 2019ஆம் ஆண்­டில் 68,000க்கு மேற்­பட்­டோ­ரும் 2020ஆம் ஆண்­டில் 50,000க்கு மேற்­பட்­டோ­ரும் பரி­சோ­த­னை­யைச் செய்­து­கொண்­ட­னர்.

இருப்­பி­னும், இந்­நோய் ஏற்­படும் அபா­யம் அதி­கம் உள்­ள­வர்­கள், 'கொலொ­னோஸ்­கோப்பி' செல்­வ­தற்கு அதி­க செல­வா­கும், குட­லைப் பரி­சோ­த­னைக்­குத் தயார்­செய்­வ­தில் தயக்­கம் ஆகி­ய­வற்­றால் தவிர்த்­து­வி­டு­வ­தாக பேரா­சி­ரி­யர் டான் தலை­மை­யில் நடந்த ஆய்வு தெரி­வித்­துள்­ளது.

கழி­வுக் கட்­ட­ணத்­தில் செய்­யப்­படும் கொலொ­னோஸ்­கோப்­பிக்கு $550 முதல் $700 வரை செல­வா­கும் என்­றார் பேரா­சி­ரி­யர்.

இருப்­பி­னும் பரி­சோ­த­னைக்­குத் தயா­ரா­வதற்கு நான்கு முதல் ஆறு மணி நேரம் பிடிக்­கும். அத்­து­டன் வயிற்­றுப்­போக்­கை­யும் நோயா­ளி­கள் அனு­ப­விக்க வேண்­டி­யி­ருக்­கும். சுகா­தா­ரப் பரா­ம­ரிப்பு நிபு­ணர்­க­ளின் அறி­வு­றுத்­தல்­கள், குடும்­பத்­தார் மற்­றும் நெருங்­கிய நண்­பர்­க­ளி­ட­மி­ருந்து ஆத­ரவு உள்ள நிலை­யில் உயர் அபா­யத்­தில் உள்ள நபர்­கள் பரி­சோ­த­னைக்­குச் செல்ல ஊக்­கம் பெறு­வ­தா­க­வும் ஆய்வு கூறி­யது.