தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

புற்றுநோயாளிகளும் ஒவ்வாமை உள்ளவர்களும் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம்

2 mins read

கொவிட்-19 தடுப்­பூசி தொடர்­பான விதி­மு­றை­களை சுகா­தார அமைச்சு கடந்த வாரம் தளர்த்­தி­ய­தால், இப்­போது தடுப்­பூசி போட்­டுக்­கொள்ள புற்­று­நோ­யா­ளி­களும் ஒவ்­வாமை உள்­ள­வர்­களும் தகுதி பெற்­றி­ருக்­கி­றார்­கள்.

சிங்­கப்­பூர் மருத்­துவ மன்­றத்­துக்கு கடந்த வெள்­ளிக்­கி­ழமை சுகா­தார அமைச்சு அனுப்­பிய சுற்­ற­றிக்­கை­யில், 'எம்­ஆர்­என்ஏ' (mRNA) சார்ந்த கொவிட்-19 தடுப்­பூ­சி­களில் பாது­காப்பு தொடர்­பி­லான உள்­ளூர் மற்­றும் அனைத்­து­லக மருத்­துவ அறிக்­கை­களை தான் பின்­பற்­று­வதா­கத் தெரி­வித்­தது.

இதற்கு முன், சுகா­தார அமைச்சு பல வகை­யான ஒவ்­வாமை பிரச்­சி­னை­களை உள்­ள­வர்­கள் 'எம்­ஆர்­என்ஏ' சார்ந்த கொவிட்-19 தடுப்­பூ­சி­க­ளைப் போட்­டுக்­கொள்­வ­தைத் தள்­ளிப்­போ­ட­லாம் என்று அறி­வு­றுத்தியிருந்தது. ஃபைசர்-பயோ­என்­டெக், மொடர்னா போன்ற சிங்­கப்­பூ­ரில் அங்­கீ­க­ரிக்­கப்­பட்ட தடுப்­பூசி­களும் 'எம்­ஆர்­என்ஏ' சார்ந்த தடுப்­பூ­சி­களில் அடங்­கும்.

இதன் தொடர்பில் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழின் 'ஆஸ்க்­எஸ்டி' (askST) எனும் பகு­தி­யில் இடம்­பெற்ற சில கேள்­வி­க­ளும் அதற்­கு­ரிய பதில்­க­ளும்.

கேள்வி: எனக்கு ஒவ்­வாமை இருந்­தால் நான் தடுப்­பூசி போட்­டுக்­கொள்­ள­லாமா?

பதில்: போடலாம். ஒரு­வேளை உங்­க­ளுக்கு 'அனா­பி­லாக்­ஸிஸ்' பிரச்­சி­னையோ அல்­லது அபா­யமோ இருந்­தால், மற்ற தடுப்­பூ­சி­களை ஏற்­றுக்­கொள்­ளாத ஒவ்­வாமை இருந்­தால், குறிப்­பிட்ட சில மருந்­து­களை ஏற்­றுக்­கொள்­ளாத கடு­மை­யான ஒவ்­வாமை இருந்­தால் நீங்­கள் கொவிட்-19 தடுப்­பூசி போட்­டுக்­கொள்ள முடி­யாது.

மாறாக, இப்­போ­தைக்கு கொவிட்-19 தடுப்­பூசி போடு­வதை ஒத்­திப்­போட்டு, ஒவ்­வாமை தொடர்­பி­லான மருத்­துவ நிபு­ண­ரின் ஆலோ­ச­னை­யைப் பெற்­றுள்ள தகுதி­நி­லையை உறு­திப்­படுத்­திக்­கொள்­ள­லாம் என்று சுகா­தார அமைச்சு கூறு­கிறது.

கேள்வி: ஃபைசர்-பயோ­என்­டெக் அல்­லது மொடர்னா தடுப்­பூ­சியை முதல் முறை­யாக போட்­டுக்­கொண்ட பிறகு, எனக்கு ஒவ்­வாமை ஏற்­பட்­டால், எனக்கு இரண்­டா­வது முறை­யாக அந்­தத் தடுப்­பூசி போடப்­ப­டுமா?

பதில்: இல்லை. 'எம்­ஆர்­என்ஏ' சார்ந்த கொவிட்-19 தடுப்­பூ­சியை முதல் முறை­யாக பெற்­றுக்­கொண்ட பிறகு ஒவ்­வாமை ஏற்­பட்­டால், இரண்­டா­வது முறை­யாக போட்­டுக்­கொள்­ளக்­கூ­டாது. முதல் முறை தடுப்­பூ­சி­யைப் போட்­டுக்­கொண்ட பிறகு 'அனா­பி­லாக்­ஸிஸ்' ஒவ்­வாமை ஏற்­ப­டு­வோ­ரும் அதில் அடங்­கு­வர்.

ஏழு நாட்­க­ளுக்­குப் பிறகு, 'உர்ட்­டி­கா­ரியா' எனும் அரிக்­கும் தடிப்பு­கள் கொண்ட தோல் வியாதி அல்­லது 'எஞ்­சி­யோ­டீமா' எனும் தோல் வியாதி ஏற்­பட்­ட­வர்­க­ளுக்­கும் இரண்­டா­வது முறை­யாகத் தடுப்­பூசி போடப்­ப­டாது.

கேள்வி: எந்த வகை புற்­று­நோ­யா­ளி­க­ளுக்கு ஃபைசர்-பயோ­என்­டெக் அல்­லது மொடர்னா தடுப்­பூசி போட­லாம்?

பதில்: கீமோ­தெ­ரபி, ரேடியோ தெரபி அல்­லது இமு­னோ­தெ­ரபி சிகிச்சை பெற்­றுக்­கொள்­ளாத புற்று ­நோ­யா­ளி­கள் கொவிட்-19 தடுப்­பூசி­யைப் போட்­டுக்­கொள்­ள­லாம்.

கடந்த மூன்று மாதங்­களில் எவ்­வித புற்­று­நோய் தொடர்­பான சிகிச்­சைக்­குச் செல்­லா­தோ­ரும் அடுத்த இரண்டு மாதங்­க­ளுக்கு எவ்­வித சிகிச்­சைக்­கும் செல்லத் திட்­ட­மில்­லா­தோ­ரும் கொவிட்-19 தடுப்­பூ­சி­யைப் போட்­டுக்­கொள்­ள­லாம்.

புற்­று­நோய் ஹார்­மோ­னல் தெரபி சிகிச்சை பெற்­றுக்­கொள்­ப­வர்­கள் அல்­லது புற்­று­நோ­யால் முன்பு பாதிக்­கப்­பட்டு, குண­மாகி வரு­பவர்­கள் ஆகி­யோ­ரும் தடுப்­பூசி போட்­டுக்­கொள்­ள­லாம் என்று விளக்­கப்­பட்­டது.