$11 பி. கையிருப்பு நிதியை எடுக்க அதிபர் ஒப்புதல்

$11 பி. கையிருப்பு நிதியை எடுக்க அதிபர் ஒப்புதல்

2 mins read

கொவிட்-19 கொள்­ளை­நோய் பர­வ­லுக்கு எதி­ரான போரட்­டத்­தின் நிதி ஆத­ரவு நட­வ­டிக்­கை­க­ளுக்­குத் தேைவ்வ­டும் $11 பில்­லி­யன் தொகையை கடந்த கால நிதி கையி­ருப்­பில் இருந்து எடுக்க அதி­பர் ஹலிமா யாக்­கோப் நேற்று அனு­மதி வழங்கினார்.

அர­சாங்­கத்­தின் செல­வி­னத் திட்­டங்­

க­ளுக்கு இம்­மா­தம் 8ஆம் தேதி நாடா­ளு­மன்­றம் ஒப்­பு­தல் வழங்­கி­யது.

அர­சாங்­கம் தாக்­கல் செய்த வர­வு­செ­ல­வுத் திட்­டம், ஒவ்­வோர் அமைச்­சின் செல­வின ஒதுக்­கீட்டு மசோ­தாக்­கள் ஆகி­ய­வற்­ளைப் பரி­சீலனை செய்ய நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் ஒன்­பது நாட்­கள் ஒதுக்­கி­னர். அதன் பிறகு அவற்றை நாடா­ளு­மன்­றம் ஏற்­றுக்­கொண்­டது.

மொத்­த­மாக 2021ஆம் நிதி ஆண்டு முழு­மைக்­கும் தேவைப்­படும் $107 பில்­லி­யன் நிதிக்­கு­ரிய திட்­டங்­கள் இவை.

தொடர்ச்­சியாக இரண்டு நிதி ஆண்­டு­களில் கடந்­த­கால நிதி கையி­ருப்பு எடுக்கப்­பட்டு உள்­ளது.

இது­கு­றித்து நேற்று தமது ஃபேஸ்புக் பதி­வில் கருத்­து தெரி­வித்த அதி­பர், அசா­தா­ரண சூழ­லில் நமது பொரு­ளி­யல் வீழ்ச்­சி­யைத் தடுத்து கொள்­ளை­நோய் சிர­மத்தை நிர்­வ­கிக்க இந்த நிதி மீட்பு பயன்­படும் என தெரி­வித்­தார்.

கொள்­ளை­நோய் பர­வ­லுக்கு இடை­யில் பொரு­ளி­யலை பத்­தி­ர­மா­கத் திறப்­ப­தற்­கான செயல்­களில் சிங்­கப்­பூர் ஈடு­பட்­டு வரும் வேளை­யில் ஊழி­யர்­க­ளை­யும் வர்த்­த­கர்­க­ளை­யும் ஆத­ரிக்­க­வும் இது உத­வும் என்­றார் அவர்.

"நமது மக்­கள் மீதான கொள்­ளை­

நோ­யின் தாக்­கத்­தைத் தணிப்­ப­தற்­கு­ரிய தீர்க்­க­மான நட­வ­டிக்­கை­களை அர­சாங்­கம் தொடர நாம் நமது கடந்த கால நிதி கையி­ருப்­பைப் பயன்­ப­டுத்­தும் வச­தி­யைப் பெற்­றி­ருப்­பது நமது அதிர்ஷ்­டம்.

"எதிர்­கா­லம் இன்­னும் நிச்­ச­ய­மற்­ற­தாக இருக்­கும் வேளை­யில் நான் அனை­வ­ரும் ஒன்­று­சேர்ந்து இயங்­கு­வ­தைத் தொட­ரு­வோ­மா­னால் சிர­மங்­க­ளி­லி­ருந்து மீண்டு எதிர்­கா­லத்­திற்­குத் தயா­ரா­வ­தற்­கான பணி­களில் சிங்­கப்­பூர் ஈடு­படும் என்ற நம்­பிக்கை எனக்கு உள்­ளது," என்­றும் அதிபர் ஹலிமா தமது பதி­வில் குறிப்­பிட்­டுள்­ளார்.

இப்­போது எடுக்கப்படும் $11 பில்­லி­யன் நிதி பொது சுகா­தா­ரம், பாது­காப்­பான மறு­தி­றப்பு நட­வ­டிக்­கை­கள் போன்­றவை தொடர்­பான மீள்­தி­றன் தொகுப்­புக்கு நிதி­யு­தவி அளிக்­கப் பயன்­படும்.

தடுப்­பூசி, ஊழி­யர்­க­ளுக்­கும் நிறு­வ­னங்­க­ளுக்­கு­மான தொடர் ஆத­ரவு, விமா­னப் போக்­கு­வ­ரத்து போன்ற மோச­மா­கப் பாதிக்­கப்­பட்ட துறை­க­ளுக்­கான உதவி ஆகி­யன இத­னுள் அடங்­கும்.