தலைமைச் சட்ட அதிகாரிக்கு எதிராக வழக்குத் தொடுப்பது தொடர்பான ஆவணங்களைக் கேட்டு 22 மரண தண்டனைக் கைதிகள் தாக்கல் செய்த மனுவை உயர் நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்துவிட்டது. அந்தக் கைதிகளின் சார்பில் வழக்கறிஞர் எம்.ரவி முன்னிலை ஆனார்.
சட்ட நடவடிக்கை எடுப்பதா வேண்டாமா என்பதைத் தீர்மானிக்குமுன்னர் அது தொடர்பான தகவல்களைக் கோரு வதற்கான நடைமுறையின்கீழ் இம்மனு தாக்கல் செய்யப்பட்டதாகக் கூறப்பட்டது. மரண தண்டனை கைதிகளுக்கும் அவர்களின் வழக்கறிஞர்களுக்கும் இடையிலான கடிதங்களும் அந்தக் கைதிகளுக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கும் இடையிலான கடிதங்களும் சிங்கப்பூர் சிறைச் சேவை துறையால் தலைமைச் சட்ட அதிகாரியின் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும் அச்செயல்களுக்காக வழக்குத் தொடர கைதிகள் ஆலோசித்து வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.
ஆனால், தலைமைச் சட்ட அதிகாரிக்கு எதிரான முன்நடவடிக்கை தகவல்களைக் கேட்பதில் இருந்து கைதிகள் விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாகக் கூறிய நீதிபதி சீ கீ ஊன், மனுவைத் தள்ளுபடி செய்தார்.

