காதலியை பலமுறை தாக்கிய ஆடவருக்கு சிறை, அபராதம்

காதலியை பலமுறை தாக்கிய ஆடவருக்கு சிறை, அபராதம்

1 mins read

தமது காதலி மீது வெறுப்­ப­டைந்து அவ­ரைத் தாக்­கிய குற்­றத்தை ஆட­வர் ஒரு­வர் ஒப்­புக்­கொண்­டார். ஜோஷுவா இங் வெய்ஜீ, 30, எனப்­படும் அவர் தற்­போது 54 வய­தா­கும் அந்­தப் பெண்ணை சாமு­ராய் வாளால் மிரட்­டிய குற்­றத்­தை­யும் புரிந்­த­தாக நீதி­மன்­றத்­தில் தெரி­விக்­கப்­பட்­டது. அந்­தப் பெண்­ணின் விவ­ரங்­கள் வெளி­யி­டப்­ப­ட­வில்லை.

காதலி வாட­கைக்கு எடுத்­தி­ருந்த கொண்­டோ­மி­னிய வீட்­டில் 2017ஆம் ஆண்டு முதல் இரு­வ­ரும் வசித்து வந்­த­தா­க­வும் கடந்த ஆண்டு ஜன­வரி, மார்ச் மாதங்­களில் இரு­வ­ருக்­கும் இடை­யில் வாக்­கு­வா­தங்­கள் ஏற்­பட்­ட­தா­க­வும் அர­சுத் தரப்பு வழக்­க­றி­ஞர் கூறி­னார். அப்­போது அப்பெண்ணை ஆட­வர் தாக்­கி­னார். ஆட­வ­ருக்­காக கடன்முதலையிடம் அந்­தப் பெண் $3,000 கடன் வாங்­கிக் கொடுத்­துள்­ளார்.

அத­னைத் திருப்­பிச் செலுத்த நினை­வூட்­டி­ய­போ­து பெண்ணின் முகத்தில் குத்தி ஆட­வர் தாக்­கி­னார்.

கடந்த ஆண்டு ஏப்ரல் 25ஆம் தேதி பின்னிரவு 3 மணியளவில் அவ்விருவருக்கும் இடையில் மீண்டும் சச்சரவு ஏற்பட்டது.

மற்றொரு சம்பவத்தின்போது நாற்காலியில் உட்கார வைத்து அந்தப் பெண்ணை ஆடவர் கட்டி வைத்துள்ளார்.

அடித்து தாக்­கிய குற்­றங்­க­ளோடு போதைப் பொருள் உட்­கொண்­டது, உரி­மம் இன்றி வாக­னம் ஓட்­டி­யது போன்ற குற்­றங்­க­ளுக்­கா­க­வும் மூன்று ஆண்டு, ஐந்து மாத சிறைத் தண்­ட­னை­யும் $2,100 அப­ரா­த­மும் ஆட­வ­ருக்கு விதிக்­கப்­பட்­டன.