நிதிப் பிரச்சினை: உடல் பராமரிப்பு சிகிச்சை நிலைய கிளைகள் மூடல்
'நோவு ஏஸ்தெடிக்ஸ்' என்னும் உடல் பராமரிப்பு சிகிச்சை நிலையம் கடந்த திங்களன்று சிங்கப்பூரில் உள்ள தனது எல்லாக் கிளைகளையும் மூடிவிட்டது. ஏற்கெனவே சிக்கலில் தவிக்கும் நொவினா குளோபல் ஹெல்த்கேர் குழுத்தின் துணை நிறுவனத்தின்கீழ் இது செயல்பட்டு வந்தது. நிதிப் பிரச்சினை காரணமாக நிறுவனத்தின் மருத்துவர்களுக்குக் கட்டாய விடுப்பு அளிக்கப்பட்டதாக வும் ஊழியர்களுக்குச் சம்பளம் வழங்கப்படவில்லை என்றும் கூறப்பட்டது. கிளைகள் மூடப்படுவதற்கு முன்புவரை சிகிச்சைக்கு தங்களால் முன்பதிவு செய்ய இயலவில்லை என்றும் சில கிளைகளில் தங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதாகவும் பயனீட்டாளர்கள் அதிருப்தி தெரிவித்தனர். சிலர் போலி சின் உதவியை நாடினர். ஏற்கெனவே பணம் செலுத்தப் பட்டிருந்த சிகிச்சைத்தொகுப்புக்கும் முன்பதிவு ஏற்கப்பட வில்லை என்று சிலர் கூறினர். புகார் பதிவு செய்யப்பட்டி ருப்பதை போலிஸ் உறுதி செய்துள்ளது.
பணிப்பெண்ணை துன்புறுத்திய பெண்ணுக்கு 15 மாத சிறை
பணிப்பெண்ணை துன்புறுத்திய குற்றத்திற்காக 41 வயது பெண்ணுக்கு நேற்று 15 மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. மன் சாவ் யெங் எனப்படும் அவர், யுனி டிவி லெஸ்தாரி எனப்படும் தமது 26 வயது இந்தோனீசிய பணிப்பெண்ணை 2019 பிப்ரவரி 4ஆம் தேதி துன்புறுத்திய குற்றத்தை ஒப்புக்கொண்டார். சமையலறை சன்னல்களில் விரல்ரேகைத் தடம் பதிந்திருந்ததைக் கண்டு யுனி மீது ஆத்திரமடைந்த அந்தப் பெண் இறைச்சி அரைக்கும் உலோகக் கருவியால் தமது வாயில் தாமே 50 முறை அடித்துக்கொள்ள வேண்டும் என தண்டனை விதித்தார். அவ்வாறு அடித்துக் கொண்டதால் யுனியின் கீழ்த்தாடையில் மூன்று பற்கள் ஆடியதாகத் தெரிவிக்கப்பட்டது. அதன் பிறகும் ஆத்திரம் தணியாமல் பற்களை உடைக்கும் நோக்கில் அந்தக் கருவியால் ஒருமுறை அப்பெண் தாக்கினார். பணிப்பெண்ணை துன்புறுத்திய மூன்று குற்றச்சாட்டுகளை அவர் ஒப்புக்கொண்டார். மேலும் நான்கு குற்றச்சாட்டுகள் தண்டனை விதிப்பின்போது கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டன.
சிறுவர்களின் ஆபாசப் படங்கள்
சிறுவர்கள் நிர்வாணமாக இருக்கும் 58 காணொளி படங்களை எடுத்த குற்றத்தை 16 வயது சிறுவன் நேற்று நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டார். செங்காங் விளையாட்டு வளாகத்தில் உள்ள ஆண்கள் கழிப்பறையில் உடைமாற்றியபோது தாம் படமெடுத்ததாகவும் 2019ஆம் ஆண்டில் இரண்டு நாட்கள் தாம் இவ்வாறு செய்ததாகவும் சிறுவன் ஒப்புக்கொண்டார். சிறுவன் தொடர்பான நன்னடத்தைக் கண்காணிப்பு அறிக்கையை நீதிபதி கேட்டுள்ளார்.

