இரு வாரங்களுக்கு இடி, மழை

இரு வாரங்களுக்கு இடி, மழை

1 mins read

சிங்­கப்­பூ­ரில், அடுத்த இரு வாரங்­க­ளுக்கு இடி­யு­டன் கூடிய மழையை அதி­க­மாக எதிர்­பார்க்­க­லாம் என்று வானிலை ஆய்வு மையம் முன்­னு­ரைத்­துள்­ளது.

மார்ச் மாதத்­தின் பெரும்­பா­லான நாள்­களில், தீவின் பல பகு­தி­களில் மித­மான மழை முதல் கன மழை வரை­ எதிர்­பார்க்­க­லாம். பெரும்­பா­லும் பிற்­ப­க­லில் இடி­யு­டன் கூடிய மழை பெய்­யும் என்று முன்­னு­ரைக்­கப்­பட்­டுள்­ளது. சில நாள்­களில் மாலை வரை மழை நீடிக்­க­லாம். எனி­னும், ஒட்­டு­மொத்­த­ மழை­யின் அளவு, தீவின் பெரும்­பா­லான பகு­தி­களில் சாதா­ர­ண­மாக இருக்­கும்.

அதே­நே­ரத்­தில், பெரும்­பா­லான நாள்­களில் வெப்­ப­நிலை 24 டிகிரி செல்­சி­ய­சுக்­கும் 33 டிகிரி செல்­சி­ய­சுக்­கும் இடைப்­பட்­டி­ருக்­கும். சில நாட்­களில் வெப்­ப­நிலை 34 டிகி­ரிக்கு உய­ர­லாம்.

இம்­மா­தத்­தின் முதல் இரு வாரங்­க­ளைப் போல, அடுத்த இரு­வா­ரங்­கள் வெப்­ப­மாக இருக்­காது என வானிலை ஆய்வு மையம் கூறி­யுள்­ளது. கடந்த இரு­வா­ரங்­களில் வெப்­ப­நிலை சரா­ச­ரி­யாக 34 டிரிசி செல்­சி­ய­சாக இருந்­தது.

மார்ச் 2ஆம் தேதி ஆக அதி­க­மாக 35.6 டிகிரி செல்­சி­ய­சுக்கு உயர்ந்­தது. மார்ச் 8ஆம் தேதி குளிர்ந்த நாளாக 21.4 டிகிரி வெப்­ப­நி­லை­யு­டன் இருந்­தது.