ஒவ்வோர் ஆண்டும் நடைபெறும் சிங்கப்பூர் பிரஸ் ஹோல்டிங்சின் (எஸ்பிஎச்) விருதளிப்பு நிகழ்வில், இம்முறை வெற்றியைக் குவித்த கதைகள் யாவும் கொவிட்-19, சிங்கப்பூர் பொதுத் தேர்தல் ஆகியவற்றின் தொடர்பானவை.
மிகச் சிறந்த செய்தியாளர்களை கௌரவிக்கும் இவ்விருது நிகழ்வில் மொத்தம் 17 விருதுகள் வழங்கப்பட்டன.
'ஆண்டின் சிறந்த புகைப்படம்' என்ற விருதை வென்றவர், ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் பத்திரிகையின் சோங் ஜுன் லியாங்.
கொவிட்-19 சூழல் கருதி அனைத்து வெளிநாட்டுப் பயணங்களுக்கும் மலேசியா சென்ற ஆண்டு மார்ச் 31ஆம் தேதி வரை தடை விதிப்பதாக அறிவித்தது.
அதையடுத்து, நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை நடைமுறைக்கு வருவதற்குச் சில மணி நேரம் வரை, மலேசியர்கள் உட்லண்ட்ஸ் சுங்கச்சாவடியை அடைவதற்காக மார்ச் 17ஆம் தேதியன்று காஸ்வே பாலத்தில் படையெடுத்து நடந்து வந்தனர்.
இக்காட்சியைச் சிறப்பாகப் படம் பிடித்திருந்தார் சோங்.

