உலகில் 'டிஸ்லெக்ஸியா' எனும் குறைபாட்டால் கிட்டத்தட்ட 10 விழுக்காட்டினர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனைத்துலக புள்ளிவிவரங்கள் கூறியுள்ளன.
இந்நிலையில் சிங்கப்பூரில் 'டிஸ்லெக்ஸியா' தொடர்பான சவால்களுக்கு ஒவ்வோர் ஆண்டும் சுமார் 27,000 பாலர் பள்ளி மாணவர்களுக்கு ஆதரவு தேவைப்படுவதாகக் கூறப்படுகிறது.
வாசித்தல், எழுதுதல் திறன்களில் இத்தகைய 'டிஸ்லெக்ஸியா' குறைபாடுள்ள சிறுவர்களுக்குப் பயிற்சி அளிப்பதில் பாலர் பள்ளிக் கல்வியாளர்கள் கவனம் செலுத்தி வருகின்றனர். ஆனால், அப்பிள்ளைகளிடம் இருக்கக்கூடிய வேறு திறன்களைப் பற்றி ஆராய்ந்திடத் தவறிவிடுவதாக சிங்கப்பூர் டிஸ்லெக்ஸியா சங்கத்தைச் சேர்ந்த கல்வியியல் சிகிச்சையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு பிறரால் கவனிக்கப்படாத திறமைகள் இருந்தும் அத்திறன்களை வளர்ப்பதற்கான முயற்சிகள் நடக்காமல் போவதால், பாலர்களுக்குத் தன்னம்பிக்கை குறையலாம்.
இந்நிலை நேராமல் இருக்க, சங்கம் புதிய ஆய்வு ஒன்றை மேற்கொண்டுள்ளது. இதன் தொடர்பில் நேற்று சங்கத்தின் வருடாந்திர பாலர் பள்ளி கருத்தரங்கில் அறிவிக்கப்பட்டது.

