தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

$81,000ஐ கையாடல்: மேல்முறையீடு மனு தள்ளுபடி

2 mins read

ஒரு­வ­ரது உண்­மை­யான அடை­யாளம் அறி­யப்­ப­டாத நிலை­யி­லும், அவர் ஒப்­ப­டைக்­கும் பணம், சொத்து ஆகி­ய­வற்­றைப் பிறர் கையா­டி­னால் அது குற்­ற­வி­யல் நம்­பிக்கை மோச­டியே என்று உயர் நீதி­மன்­றம் நேற்று தெளி­வுப்­ப­டுத்­தி­யது.

மின்­னஞ்­சல் மூலம் ராஜ் குமார் பிரிசா பேஸ்­நாத் என்­ப­வ­ரு­டன் 'மரியா லொய்ட்' என்ற அடை­யா­ள­மு­டைய ஒரு­வர் 2012ல் உரை­யாடத் தொடங்­கி­னார்.

தன்­னைச் சந்­திக்க சிங்­கப்­பூர் வரு­வ­தா­கக் கூறி அந்த பெண் பணம் கேட்க, ராஜ் குமா­ரும் $1,200 பணம் அனுப்­பி­னார். ஆனால் அவர் சிங்­கப்­பூர் வர­வில்லை.

பின்­னர், ஒரு குறிப்­பிட்ட தொகையை ராஜ் குமார் பெற்­றுக்­கொண்டு மலே­சி­யா­வுக்கு வரு­மாறு மரியா கேட்­டுக்­கொண்­டார்.

அத­னால், 2013ஆம் ஆண்டு மார்ச் 9ஆம் தேதி­யன்று ஆயி­ரம் வெள்ளி நோட்­டு­களாக இருந்த $81,000ஐக் கொண்ட உறையை ராஜ் குமார் இடைத்­த­ர­க­ரான திரு­வாட்டி மெலடி சூங்­கி­ட­மி­ருந்து பெற்­றுக்­கொண்­டார்.

திரு­வாட்டி சூங் அதே உறையை திரு சீ மின் ஜியோங் என்­ப­வ­ரி­ட­மி­ருந்து பெற்­றுக்­கொண்­டார். திரு சீயின் வங்­கிக் கணக்­கில் அத்­தொகை போடப்­பட்­ட­தா­கக் கூறப்­பட்­டது. இருப்­பி­னும், ராஜ் குமார் பணத்தை மலே­சி­யா­வுக்­குக் கொண்டு செல்­ல­வில்லை.

பணத்தை அனுப்­பி­ய­வ­ருக்கு திரு சீ பணத்­தைத் திரும்­பக் கொடுக்க வேண்­டும் என்று வங்கி திரு சீயி­டம் தெரி­வித்­ததை அடுத்து, அவர் போலிஸ் புகார் செய்­தார்.

இதற்காக ராஜ் குமா­ருக்கு 13 மாதச் சிறைத் தண்­டனை விதிக்­கப்­பட்­டி­ருந்­தது.

இதன் தொடர்­பில் மேல்­மு­றை­யீடு செய்த ராஜ் குமா­ரின் வழக்­க­றி­ஞர், ராஜ் குமார் உட்­பட சிலரை ஏமாற்­றக் கற்­ப­னை­யாக உரு­வாக்­கப்­பட்ட கதா­பாத்­தி­ரம் ஒன்று இவ்­வாறு இணை­யம் வழி ஏமாற்­றி­ய­தால், எவ்­வி­தக் குற்­ற­வி­யல் நம்­பிக்கை மோச­டி­யும் நடக்­க­வில்லை என்று வாதா­டி­னார்.

இருப்­பி­னும், அவ­ரின் வாதத்தை நிரா­க­ரித்­தார் நீதி­பதி.

மரி­யா­வின் உண்­மை­யான அடை­யா­ளம் அறி­யப்­ப­டா­விட்­டாலும் பணம் ராஜ் குமார் பொறுப்­பில் ஒப்­ப­டைக்­கப்­பட்­ட­தா­க­வும் மரியா கேட்­டுக்­கொண்­ட­தற்கு ஏற்ப ராஜ் குமார் பணத்­தைக் கையாண்­டி­ருக்க வேண்­டும் என்­ப­தா­க­வும் நீதி­பதி விளக்­கி­னார்.

பணத்தை ராஜ் குமார் வைத்­துக்­கொண்­டது கையா­டலே என்­றார் அவர்.