தடுப்பூசி போட்டுக்கொள்ள ஊழியர்களை ஊக்குவியுங்கள்

தடுப்பூசி போட்டுக்கொள்ள ஊழியர்களை ஊக்குவியுங்கள்

2 mins read

முதலாளிகளுக்கு தலைமை சுகாதார விஞ்ஞானி வலியுறுத்து

முத­லா­ளி­க­ளுக்கு கொவிட்-19 தடுப்­பூசி வழங்­கப்­ப­டும்­போது அவர்­கள் அதைப் போட்­டுக்­கொள்ள வேண்­டும் என்­றும் தடுப்­பூசி போட்டுக்­கொள்ள தங்­க­ளது ஊழி­யர்­களை­யும் சக பணி­யா­ளர்­க­ளை­யும் அவர்­கள் ஊக்­கப்படுத்த வேண்டும் என்­றும் சிங்­கப்­பூ­ரின் தலை­மை சுகா­தார விஞ்­ஞா­னி­யான பேரா­சி­ரி­யர் டான் சோர் சுவான் கூறி­யுள்­ளார்.

சிங்­கப்­பூர் வர்த்­த­க சம்­மே­ள­னம் நேற்று ஏற்­பாடு செய்த இணை­யக் கருத்­த­ரங்கு ஒன்­றில் கலந்­து­கொண்டு பேசிய அவர் இத­னைத் தெரி­வித்­தார்.

மூத்த நிர்­வா­கத்­தி­னர், மனி­த­வள இயக்­கு­நர்­கள், மேலா­ளர்­கள் ஆகிய தரப்­பி­னரை இலக்­கா­கக் கொண்ட இந்­தக் கருத்­த­ரங்­கில் வர்த்­த­கச் செயல்­பா­டு­களில் கொவிட்-19 தடுப்­பூ­சித் திட்­டம் ஏற்­ப­டுத்­தும் தாக்­கம், கொள்­ளை­நோய் பர­வும் சூழ­லில் நிறு­வ­னங்­கள் எவ்­வாறு தொடர்ந்து தங்­க­ளது செயல்­பா­டு­களை நிர்­வ­கிக்­க­லாம் உள்­ளிட்ட விவ­கா­ரங்­கள் குறித்து பேசப்­பட்­டன.

சிங்­கப்­பூ­ரில் அவ­ச­ரகாலப் பயன்­பாட்­டிற்கு ஒப்­பு­தல் பெற்ற 'ஃபைசர்-பயோ­என்­டெக்', 'மொடர்னா' தடுப்­பூ­சி­கள் குறித்­துப் பேசிய பேரா­சி­ரி­யர் டான், அவை செயல்­தி­றன்­மிக்­கவை, பாது­காப்­பா­னவை என்­ப­தைச் சுட்­டி­னார்.

கூட்டு நோய் எதிர்ப்­புச் சக்தி எப்­படி ஏற்­ப­டுத்­தப்­ப­டு­கிறது என்­பது பற்­றி­யும் பேரா­சி­ரி­யர் டான் விளக்­கி­னார். அதா­வது, மக்­கள்­தொ­கை­யில் குறிப்­பி­டத்­தக்க எண்­ணிக்­கை­யி­லா­னோர் தடுப்­பூசி போட்­டுக்­கொண்­டால் தடுப்­பூசி போட்­டுக்­கொள்ள முடி­யா­த­வர்­களும் பாது­காக்­கப்­ப­டு­வதாக அவர் சொன்­னார்.

எனி­னும், வேக­மா­கப் பர­வும் புது­வகை கொரோனா கிரு­மி­யால் பொதுச் சுகா­தா­ரக் கட்­டுப்­பா­டும் ஏற்­கெ­னவே தயா­ரிக்­கப்­பட்ட தடுப்­பூ­சி­க­ளின் செயல்­தி­ற­னும் பாதிக்­கப்­ப­டக்­கூ­டும் என்­ப­தால் மேலும் அதி­க­மா­னோர் தடுப்­பூசி போட்­டுக்­கொள்ள வேண்­டும் என்று பேரா­சி­ரி­யர் டான் வலி­யு­றுத்­தி­னார்.

"நாம் வாழும், வேலை செய்­யும் முறை­யில் வழக்­க­நி­லைக்­குத் திரும்ப தடுப்­பூசி உத­வு­கிறது. என்­றா­லும், இலக்கை எட்­டு­வ­தில் பய­ணம் எளி­தாக இருக்­கும் என நாம் எதிர்­பார்க்­கக்­கூ­டாது. இறுதிக்­கட்­டத்­தில் பல திடீர் திருப்­பங்­கள் ஏற்­படும். அவற்­றுக்கு ஏற்­றாற்­போல் நம்மை நாம் மாற்­றிக்­கொள்ள வேண்­டும்," என்று அவர் அறி­வுறுத்­தி­னார்.

நிறு­வன ஊழி­யர்­கள் கொவிட்-19 தடுப்­பூசி போட்­டுக்­கொள்ள அவர்­களது முத­லா­ளி­கள் எவ்­வாற்று ஊக்­க­ம­ளிக்­க­லாம், தடுப்­பூசி போட்டுக்­கொண்ட ஊழி­யர்­கள், அதைப் போட்­டுக்­கொள்­ளாத ஊழி­யர்­கள் என ஊழி­யர்­களை இரு­வி­த­மாக வர்த்­த­கங்­கள் பிரித்­துப் பார்க்­க­லாமா என்­பது குறித்­தும் அந்தக் கருத்­த­ரங்­கில் உரை­யா­டப்­பட்­டது.