வெளிநாடுகளில் இருந்து சிங்கப்பூர் வந்த 15 பேருக்கு கிருமித்தொற்று

வெளிநாடுகளில் இருந்து சிங்கப்பூர் வந்த 15 பேருக்கு கிருமித்தொற்று

1 mins read

சிங்­கப்­பூ­ரில் புதி­தாக 15 பேருக்கு கொரோனா கிரு­மித்­தொற்று உறுதி செய்­யப்­பட்­ட­தாக நேற்று அறி­விக்­கப்­பட்­டது.

அவர்­கள் அனை­வ­ரும் வெளி­நா­டு­களில் இருந்து சிங்­கப்­பூ­ருக்கு வந்­த­வர்­கள் என்று சுகா­தார அமைச்சு நேற்று வெளி­யிட்ட அறிக்­கை­யில் கூறி­யது.

அவர்­களை­யும் சேர்த்து இங்கு கொரோனா கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­பட்­டோ­ரின் மொத்த எண்­ணிக்கை 60,152 ஆக உயர்ந்­து உள்­ளது.

சமூக அள­விலோ வெளி­நாட்டு ஊழி­யர் தங்­கு­வி­டு­தி­க­ளிலோ எவ­ருக்­கும் புதி­தாக தொற்று இல்லை என்று அமைச்சு கூறியது.